அப்பொழுது மஹாவின் மாமனார் மாமியார் ம் வந்துவிட, அவர்களும் இணைந்து கொள்ள எல்லாரும் சிறிது நேரம் சிரித்து பேசி கொண்டிருந்தனர்.. நொடிக்கொரு தரம் பாரதி இல்லையே என்ற குறை அனைவர் பேச்சிலும் வந்து விட அதை கேட்டு பாரதியே உருகி போனாள்...
பின் ஜானகி நினைவு வந்தவர் ஆதியிடம் காரில் இருந்த மற்ற ஷ்வீட்ஷ் மற்றும் பழங்களையும் மற்ற எல்லா பைகளையும் எடுத்து வர சொல்ல, பாரத் ம் அவன் உடன் சென்றான்..
பின் அனைவருக்கும் இனிப்பை கொடுக்க அந்த வீடே கலகவென்று ஆகியது...
ஜானகி தான் வாங்கி வந்திருந்த ஆடைகளை ஒவ்வொருக்கும் கொடுக்க, அனைவரும் முதலில் மறுத்தாலும் பின் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டனர்...
மஹா, ஈஷ்வர் மற்றும் அவன் அப்பா அம்மாவுக்கு மே தன் பரிசை கொடுக்கவும், அனைவரும் ஜானகியின் அன்பில் நெகிழ்ந்து நின்றனர்...
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“இவ பாட்டுக்கு நான் அவளை முன்பு படுத்தினதை எல்லாம் மனசுல வச்சு இன்னைக்கு நம்மள வச்சு ஏதாவது செஞ்சுட்டா?? “என்று முன்னெச்சரிக்கையாக விழித்து கொண்டான் ஆதி...
““ஹ்ம்ம் நான் அவகிட்ட பேசனும்.. ஒரு நிமிசம் இருங்க.. நான் வீடியோ கால் பண்றேன்.. அவகிட்ட காட்டுங்க.. “ என்று குதித்தாள் பாரதி..