அதை கேட்டு பாரதியின் கண்களும் கலங்கியது...
“டேய் மச்சான்.. ரொம்ப பீல் பண்ணாத.. அதான் நான் இருக்கேன் இல்ல.. உங்க அக்கா இடத்துல இருந்து என்ன செய்யணுமோ எல்லாம் பண்ணி கலக்கிடலாம்... “ என்று அவனை தட்டி கொடுத்தான்...அவனும் சமாளித்துக் கொண்டு
“ஹ்ம்ம்ம் தேங்க்ஷ் மாம்ஷ்... சரி வாங்க போகலாம்.. எல்லாரும் உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க..”
“சரி.. நீ போடா.. நான் ஒரு போட்டோ எடுக்கனும்.. எடுத்துகிட்டு வந்திடறேன்.. “என்று அவனை முன்னே அனுப்பி பின் அவன் போனை எடுக்க, அதற்குள் பாரதி தன் கண்ணை துடைத்து கொண்டு தன்னை கட்டு படுத்திக் கொண்டாள்...
“ஏய் பட்டிக்காடு.. என்ன பாசமலர் எபக்ட்க்கு போய்ட்டியா?? சரி..சரி... ரொம்ப பீல் பண்ணாத... சீக்கிரம் உன் அருமை தம்பியை நீ பார்க்கலாம்.. “ என்றான் சிரித்தவாறு..
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தான்..
பார்த்த சிறிது நேரத்திலயே ஆதிக்கும் ஈஷ்வருக்கும் நல்ல ஒரு நட்பு உண்டாகியது... அவ்வளவு வசதி இருந்தும் ஆதி ஒரு பந்தாவும் இல்லாமல் இருப்பதை கண்ட ஈஷ்வர் இன்னும் நெருங்கி வந்தான்.. பாரத் சொல்லவே வேண்டாம்.. ஆதி அவனுக்கு ஹீரோவாகி இருந்தான்... அவனுடன் சுத்தி கொண்டிருந்தான் பாரத்...