தன் அப்பா ஒவ்வொரு இதிலும் தன்னை நினைத்து கொள்கிறாரே என்று...
பின் தர்மலிங்கம் ஜானகியையே வளையலை போட சொல்ல அவர் தன் நிலையை எண்ணி மறுக்க
“மனசால என் பொண்ணு நல்லா இருக்கனும்னு நினைக்கிறவ நீ ஜானகி.. அதனால அமங்கலினு நீ சொல்றதெல்லாம் விட்டு தள்ளு..
என்னை கேட்டா நீ இன்னும் மாப்பிள்ளைய மனசுல சுமந்து கிட்டுதான் இருக்க.. அப்ப எப்படி அமங்கலி ஆக முடியும்?? .. அதெல்லாம் முடியாது... நீயே போட்டு விடு.. “ என்று அதட்ட அதற்கு மேல் தயங்காமல் அவரே மஹாவிற்கு வளையலை போட்டு விட்டு ஆசிர்வாதம் பண்ணினார்...
ஆதி மேடையின் ஓரத்தில் நின்று கொண்டு அங்கு நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தான்... அவனுக்கு பாரதியையும் இதே மாதிரி நிறுத்தி பார்த்து மனம் மகிழ்ந்தது.. எதேச்சையாக மஹாவை கண்டவன் அவள் வயிறு பெரிதாக இருப்பதை கண
...
This story is now available on Chillzee KiMo.
...
“எவ அவ என் புருஷனை சைட் அடிக்கிறது??.... இந்த பாரதி மட்டும் அங்க வந்தா எல்லார் கண்ணுலயும் மிளகாய வச்சு தேய்ச்சுருவேன்.. கொள்ளி கண்ணு.. வாட்ட சாட்டமா இருக்கிறவரை கண்டதும் எல்லார் கண்ணும் என் புருஷனைத்தான் சுத்தி கிட்டிருக்கும்... அவர் வந்த உடனே சுத்தி போடணும்... “என்று பொருமினாள் மனதுக்குள்..