இன்னும் பாரதி அவன் நடக்கும் அழகையே ரசித்து கொண்டிருக்க, ஆதி தன்னை யாரோ பார்ப்பது போல இருக்க, திரும்பியவன் பாரத் போனை தன் பக்கம் பிடிச்சு கிட்டிருப்பதை பார்த்து
“இந்த கேடி தான் என்னை சைட் அடிக்கிறாளா?? “ என்று நினைத்தவன் கண் சிமிட்டி உதட்டை குவித்தான் அவளுக்காக...
அதை கண்டு கொண்டவள் கன்னம் சிவக்க, சீ என்று கண்ணை மூடி கொண்டாள்... அவனும் சிரித்து கொண்டே தன் வேலையை தொடர, பாரத் மற்ற நிகழ்ச்சிகளை காட்டினான்...
பின் எல்லாரும் நின்று குடும்ப புகைப்படம் எடுக்க, பாரதியும் ஓடிப்போய் ஆதியின் அருகில் நின்று கொண்டாள் மானசீகமாக...
விழா நல்ல படியாக முடிந்து வீட்டிற்கு அனைவரும் வரவும், மஹாவையும் இந்திராவையும் ஆரத்தி எடுத்து வரவேற்க
தர்மலிங்கம் லட்சுமியிடம்
“நீ போய் இரண்டு மாப்பிள்ளக
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்துகொண்டார்..
பின் பாரத் மஹா கல்யாண ஆல்பத்தை எடுத்து வர, ஆதி அதில் பாரதி இருந்த புகைப்படங்களை மட்டும் நீண்ட நேரம் ரசித்து பார்த்தான்.. பின் ஈஷ்வரிடம் பாரதியை பற்றி நிறைய கேள்வி கேட்க, ஈஷ்வருக்கு லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது... ஏன் இவன் பாரதியை பற்றி அதிகம் விசாரிக்கிறான் என்று....