“ஓ... நானும் பார்த்தேன்.. சரவணன் மாமா இந்த ஊருக்காக நிறைய செய்வார் போல இருக்கு....“ என்றாள் சரவணனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில்
“ஆமா அண்ணி... நிஷா அண்ணா கூட சரவணன் அண்ணனை நிறைய தடவை சென்னைக்கே வர சொல்லி கூப்பிட்டாங்க.. ஆனால் இந்த ஊரை விட்டு வரமாட்டேன்... விவசாயம் தான் செய்வேன்.. இந்த ஊர் மக்களுக்கு விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு கொண்டு வரணும். “ அப்படீனு இங்கயே தங்கிட்டார்....
அண்ணா மாதிரி இன்னும் சில பேர் பக்கத்து ஊர்லயும் இருக்காங்க.. எல்லாரும் சேர்ந்து தான் புதுசா விவசாய முறைகளை அறிமுகபடுத்தி இங்கு விளையும் பொருட்களை நேரடியாக சந்தை படுத்தவும் சொல்லி கொடுத்தாங்க...
அதனால அண்ணாவுக்கு இந்த ஊர் மட்டும் இல்லாம சுத்தி இருக்கிற எல்லா ஊர்லயும் நல்ல பழக்கம் அண்ணி.... “ என்றாள்...
“ஹ்ம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இருக்கான்யா நம்ம அர்ஜுனன்?? .. எத்தன வருசம் கழிச்சு பார்த்தாலும் எத்தன ஹீரோ வந்தாலும் அர்ஜுனன் மாதிரி யாரும் வரமுடியாது... “ என்று சிரித்தார்..
அவர் பேச்சை கேட்டு ஆர்வமான பவித்ரா அவரிடம் பேச்சு கொடுத்தாள்.
“ஏன் தாத்தா..உங்களுக்கு அர்ஜுனன் னா ரொம்ப பிடிக்குமா?? “ என்றாள்..