அப்படியே அவளை அள்ளி கொள்ள துடித்த தன் கரங்களை கட்டுபடுத்தி கொண்டவன் அவள் அருகில் நெருங்கி படுத்து கொண்டு கண் மூட, அடுத்த நொடியில் உறங்கியிருந்தான் நிம்மதியாக நாளை அவன் நிம்மதி பறி போவதை அறியாமல்...
மறுநாள் காலை எழும்பொழுதே பவித்ராவின் வலது கண் துடித்தது.. வலது கண் துடித்தால் ஏதாவது கெட்டது நடக்கும் என்று தன் அன்னை சொல்லியது நினைவு வர, முதலில் அதை நம்பாவிட்டாலும் கடைசியாக இந்த மாதிரி துடித்தது நினைவு வந்தது..
அப்பொழுது தான் தன் அன்னை விளக்கம் சொல்லி அவளை கவனமாக இருக்க சொல்லி அனுப்பி வைக்க, அன்றுதான் அவள் ஆதியை முதலில் சந்தித்தது.. அதற்கப்புறம் தான் அவள் சோதனை காலம் ஆரம்பமானது...
அதே மாதிரி இன்று மீண்டும் துடிக்கவும் இப்ப என்ன ஆகப்போகுதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்த கோவில் பூசாரி விரைந்து வந்து அவர்களை வரவேற்றார்...
மரகதமும் அவரின் நலன் விசாரித்து பின் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்... பவித்ரா அவர் செய்வதையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,பொங்கல் வைப்பதற்கு அடுப்பை சரி பண்ணி பவித்ராவையே அடுப்பை பற்ற வைக்க சொல்லி ஆரம்பித்து வைத்தார்...