அதை கண்டு சரோஜாவின் மனம் அந்த அடுப்பை விட வேகமாக எரிந்தது... சிறிது நேரம் மரகதத்திற்கு உதவி செய்தாள்... ஜனனி அஷ்வினை வைத்து கொண்டு விளையாண்டு கொண்டிருக்க, சரவணன் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சேவலை அறுப்பதற்கு ரெடி பண்ணி கொண்டிருந்தான்..
எதேச்சையாக நிமிர்ந்த பவித்ரா சரோஜாவை காண, சரோஜா ஏதோ பதற்றத்துடன் இருப்பதை போல இருந்தது.. அடிக்கடி தன் அலைபேசியை பார்த்து கொண்டிருந்தாள்...
அதை கண்ட பவித்ரா தன் தோளை குலுக்கி பின் பொங்கல் வைக்கும் வேலையில் மும்முரமாக இருந்தாள்...
சில நிமிடங்களில் சரோஜாவின் அலைபேசி அடிக்க, அது முதல் சத்தத்திலயே அதை ஆன் பண்ணி பேச, அவளின் முகம் கொஞ்சம் மாறியது...
பவித்ரா ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, சரோஜா பேசி முடித்ததும் கையை பிசைவது தெரிந்தது... அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நேரத்தில் பொங்கல் வைக்கும் வேலை முடிந்து விட, அவர்கள் அறுத்த சேவல் கொழம்பு வைக்கும் வேலை ஆரம்பிக்க, அதற்குள் ஜனனி வந்து பவித்ராவை அழைத்து சென்றாள் அந்த இடங்களை சுற்றி பார்க்க..
கோவிலை சுற்றிலும் தெரிந்த இயற்கை காட்சிகள் கண்ணை பரிக்க, அதில் லயித்தவள் தன் கணவனை பற்றி மறந்து போனாள்....