அருகில் இருந்த வயல்களில் பெண்கள் நாற்று நட அவர்கள் வேகமாக வரிசையாக நடுவதையே வியந்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா....
சிறிது தூரம் நடக்க, செம்மறி ஆட்டு கூட்டம் வர, அதில் நடுவில் புகுந்து விளையாடியவள் ஒரு ஆட்டு குட்டியை பிடித்து அதை கொஞ்சுவது போல தன் மொபைலில் படம் எடுத்துக் கொண்டாள்...
அங்கு இருந்த காட்சிகளை எல்லாம் ரசித்து சுற்றி பார்த்த பின் கோவிலுக்கு திரும்பினர்...
மரகதம் எல்லாம் முடித்து பூஜைக்காக தயார் பண்ணி கொண்டிருக்க, சரோஜா ஒரு ஓரமாக அமர்ந்து தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தாள்... மரகதம் மட்டும்தனியாக வேலை செய்து கொண்டிருப்பதை கண்டு வேகமாக சென்று மரகதத்திற்கு உதவியவள்
“சாரி.. அத்தை கொஞ்சம் லேட் ஆகியிருச்சு.. “என்றாள்..
“பரவாயில்லை பவித்ரா.. உனக்கு இங்க இருக்கிறதெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்து ஏதோ சமாதானம் செய்து கொண்டிருந்தான்...
அதை கண்ட சரோ
“என்னாச்சு நந்து?? ஏன் அழற?? “ என்று கேட்க, சரோஜாவின் குரலை கேட்டு தலையை நிமிர்ந்த நந்தினி
“அக்கா.. “என்று அழைத்தவாறு ஓடி வந்து சரோஜாவை கட்டி கொண்டாள்...
அதை கண்டு மற்றவர்களுக்கு இன்னும் குழப்பமானது..