அந்த கிராமத்தை தவிர, சுற்றிலும் இருக்கும் எல்லா கிராமங்களில் இருந்தும் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரும் வந்திருக்க, ஒருவருக்கொருவர் கேலி பேசி கொண்டும் கிண்டல் அடித்து கொண்டும் சாப்பிட, பவித்ராவுக்கு அதெல்லாம் பார்க்க வித்தியாசமாக இருந்தது...
பண்ணையில் வேலை செய்பவர்களையும் அழைத்திருந்தார் மரகதம்....ஜனனியும் எழுந்து வந்து விட, இன்னும் அந்த இடம் கலை கட்டியது.. பவித்ராவும் ஜனனியும் பரிமாறுவதில் உதவி செய்ய, எல்லாரும் ரசித்து சாப்பிட்டனர்..
மரகத்திற்கு பவித்ரா இப்படி எல்லாரிடமும் சிரித்து பேசுவதும், இனிமையாக பழகுவதையும் காண, மனதுக்குள் சின்ன வருத்தம். தன் மறுமகளும் இந்த மாதிரி அமைஞ்சிருக்க கூடாதா என்று...
சரோ யாரிடமும் சட்டுனு பேச மாட்டாள்.. யாரையாவது அறிமுக படுத்தினாலும் சரியாக முகம் கொடு
...
This story is now available on Chillzee KiMo.
...
எப்படி திருவிழால போய் இந்த மாதிரி பண்றாங்க?? “என்றாள் இன்னும் மனம் ஒப்பாமல்...
“ஹ்ம்ம்ம்ம் இங்க இருக்கிற மக்கள் நாள் முழுவதும் வயல்ல வேகாத வெய்யில்ல நின்னு வேலை செய்யறவங்க அண்ணி.. அவங்க க்ஷ்டத்தை போக்க அப்பல்லாம் கல்லு குடிப்பாங்க.. அது உடம்புக்கு நல்லதாம்.. வலி எல்லாம் போய்டுமாம்...