ஆனா இப்ப எங்க அதெல்லாம் தொடறாங்க.. அதான் கவர்ன்மென்ட் ஏ டாஷ்மார்க் னு ஊருக்கு ஊர் திறந்து வச்சு ஆல்கஹால் விக்க ஆரம்பிச்சதுல இருந்து முக்கால் வாசி பேர் டாஷ்மார்க் பக்கம் போய்டறாங்க...
உங்களுக்கு ஒன்னு தெரியுமா அண்ணி ?? டாஷ்மார்க் அதிகம் திறந்ததே கிராமங்களில் தான் அண்ணி.. நம்ம கவர்ன்மென்ட்க்கு பாதி வருவாய் இந்த மாதிரி கிராமங்களில் இருந்துதான் போகுது.... “ என்று கதை அடித்து கொண்டிருந்தாள்..
பவித்ரா அவள் முதலில் சொன்னது புரியாமல்
“கல் லுனா என்ன ஜனி ?? “ என்றாள்...
“ஓ.. கல்லுனா தெரியாது?? பனை மரத்துல இருந்து அதோட பாலையை சீவி விட்டு ஒரு சட்டிய கட்டி விட்டுவாங்க அண்ணி... அது இறங்கினதுக்கப்புறம் அதை கொஞ்சம் புளிக்க வச்சு குடிக்கிறது.. இந்த விஷ்கி, பிராண்டி எல்லாம் வர்ரதுக்கு முன்னாடியே ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் நீரை ஊற்ற
“ஹோய்.... எட்டப்பி ஜனனி... உனக்கு இருக்கு டி.. என்கிட்ட தனியா மாட்டுவ இல்ல.. உன்னை பார்த்துக்கறேன்.. “என்று அவன் கை நீட்டி ஜனனியை மிரட்ட.
“போடா டேய்.. உன்ன மாதிரி எத்தனை பேர பார்த்திரூப்பேன்... “ என்று தன் இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டு ஷ்டைலாக நடந்தாள் ஜனனி...