அவளால் அதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரே ஒரு நொடி பார்த்த பிம்பம் எப்படி இத்துனை ஆழமாய் மனதில் பதிய முடியும்.என் ஆழ்மனதில் நஸீமின் முகம் இவ்வளவா பதிந்திருக்கிறது.அவன் என்ன நினைத்திருப்பான் என்று எண்ணும் போதே அவன் அரவம் அவளருகில் கேட்டது.
நொடியும் தாமதியாமல் அவன்புறம் திரும்பியவள் அவசரமாய்,”இல்லை..அது..நான்..”
“கங்கா!!!”
“அது எப்போதுமே ஒருமுறை பார்த்த பொருளையோ பிம்பத்தையோ அப்படியே வரைந்துவிடுவேன்.அப்படித்தான் இப்போதும்..”
இதை கேட்டுக் கொண்டிருந்த நஸீமின் முகமோ நல்லதொரு கனவு கலைந்து போனதைப் போன்று ஒளியிழந்து போனது.
“எனக்காக இதை வரைந்து கொடுத்ததற்கு நன்றி..நீ செல்லலாம்..”
“நான் கூறுவதை..”
“ஒன்றும் தேவையில்லை நீ செல்லலாம் என்று கூறிவிட்டேன்..”,என்றவன் அவள் முகம் நோக்காது திரும்பி நிற்க சிவகங்காவதிக்கோ கண்களில் நீர் கோர்த்திருந்தது.அத்துனை நேரம் இருந்த மோனநிலை மறைந்து ஒருவித இறுக்கம் உருவாகியதை தாங்கிக் கொள்ள முடியாதவளாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
தொடரும்...