அதனாலயே மோகன் அவன் அஷிஷ்டென்ட் வர முடியாமல் போக உடனே பவித்ராவை அழைத்து இந்த பிரசன்டேசனை பண்ண வைத்தது...
அந்த பார்ட்டி ஆரம்பிக்கவும் மோகன் அங்கு இருக்கும் விதவிதமான சரக்குகளை கண்டதும் அவளை தனியே விட்டுவிட்டு ஜோதியில் ஐக்கியமாக ஆரம்பித்து இருந்தான்...
ஓரமாக நின்றிருந்த பவித்ரா இதையெல்லாம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்...
அப்பொழுது ஒரு சர்வர் வந்து அவள் முன்னே ட்ரிங்க்ஷ் இருந்த ட்ரேயை நீட்ட , அவள் சிறு புன்னகையுடன் மறுத்து விட்டாள்...
சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் கண்கள் மீண்டும் துடிக்க ஆரம்பித்தன... திரும்பி மணியை பார்க்க, நேரம் ஆவதை உணர்ந்து மோகனை தேடினாள்..
ஆனால் அவனோ அவள் கண்ணிலயே படவில்லை..
“சே.. இந்த ஆள் இங்க போய் தொலஞ்சான்.. இவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க பின்னாடியே சுத்திகிட்டிருக்காளுங்களே அவளுங்கள்ள யாரையாவது கூட்டிக்கோங்க.. “ என்று பொரிந்து தள்ளினாள் முகத்தில் கோபம் பொங்க...
அதை கேட்டதும் ஆதியின் முகம் கறுத்தது.. மெல்ல திரும்பி பார்க்க, அங்கு இருந்தவர்கள் எல்லாம் இவனை நக்கலாக பார்ப்பதை போல இருந்தது..