உன்னை மாதிரி அவருமே உன்னை பார்த்த உடனே காதலிக்க ஆரம்பிச்சிருக்கனும்.. இல்லை னா சும்மா உன்னையே சுத்தி வந்து எதுக்கு அன்னைக்கு பேசணும்??
பழி வாங்கனும்னு எதுக்கு கல்யாணம் வரைக்கும் வந்திருக்கணும்.. பழி வாங்க எத்தனையோ வழிகள் இருக்கே...
சும்மா அதெல்லாம் அவருக்காக அவரே சொல்லிகிட்ட காரணங்கள்.. உண்மையிலயே உன்னை தன் பக்கத்துலயே வச்சுக்கணும் னு தான் இவ்வளவும்..
கல்யாணத்தப்பயே பார்த்தனே அவர் கண்ணில் அப்படி ஒரு காதல்.. நீயும் தான் அப்படி உருகி நின்னீயே அவர பார்த்ததும்... இரண்டு பேரும்...கடைசியில பார்த்தா ஒருத்தருக்கு ஒருத்தர் மறச்சு ஏமாத்திகிட்டு 6 மாசத்தை வேஷ்ட் பண்ணிட்டீங்களே ஜான்சி ராணி...
எனக்கு என்னவோ அவர் உன்மேல் இருக்கிற காதலை முன்னாடியே உணர்ந்துட்டார் னு நினைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
னு விவேக் பாடற மாதிரி நல்லா குழப்பறியேடி... இப்ப நீ என்ன சொல்ல வர?? “என்றாள் தலையை சொறிந்த படி..
“ஏன் டி.. விடிய விடிய இராமயணம் கேட்டு விடிஞ்சதும் சீதைக்கு ராமன் சித்தப்பானு சொன்னானாம் ஒருத்தன்...