மறுபுறம் அவனிடம் பதிலில்லாமல் போக ஜீவிகா அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்றுத் தெரியாமல் வாய்க்கு வந்ததைக் கூறிக் கொண்டிருந்தாள்.
“ரேஷ் நீங்க கவலைபடாதீங்க..ஒண்ணும் பெருசா இருக்காது..ரினி அதெல்லாம் சமாளிச்சுருவா..”
“ம்ம் ஜி நான் கேரளா கிளம்பலாம்னு இருக்கேன்.”
“ரேஷ்!!!”
“இல்ல இந்த சூழ்நிலையில அவளை மட்டும் தனியா சமாளிச்சுக்கோனு விடுறது நல்லாவா இருக்கும்..போய் பேசிப் பார்க்குறேன் ஜி..”
“யோவ் ஹீரோ விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் மாதிரி கேரளாவுக்கே போய் பொண்ணு கேட்குறதெல்லாம் ஓ.கே தான்…ஆனாலும்..”
“ஒண்ணும் பிரச்சனை ஆகாது ஜி..பார்த்து பொறுமையா பேசிட்டு வரேன்.நீ ரினிகிட்ட எதுவும் சொல்லிக்காத நான் பாத்துக்குறேன்.”
“ஓ.கே ரேஷ்..டேக் கேர்..அப்பப்போ அப்டேட் பண்ணுங்க எனக்கு..ரொம்ப டென்ஷனா இருக்கு..”
“ஷுவர் ஜி பை..மச்சான் கிட்டேயும் சொல்லிடு..”,என்று போனை வைத்தவன் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் மனதில் ஒருமுறை ஒத்திகைப் பார்த்துவிட்டு ப்ளைட் டிக்கெட் புக் செய்வதற்காக தன் மேனேஜரை அழைத்து கூறிவிட்டு கிளம்பத் தயாரானான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் ப்ளைட் , ஏர்போர்ட்டை அடைந்தவன் இறுதியாய் விமானத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்து விழி மூடினான்.அந்த பயணம் முழுவதுமே ரினிஷாவிற்கு எந்த தொந்தரவுமின்றி விஷயத்தை கையாள வேண்டும் என்பதே முக்கிய சிந்தனையாய் இருந்தது.
கொச்சின் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் கிளம்பியவன் அடுத்த முக்கால் மணி நேரத்தில் ரினிஷாவின் வீட்டை அடைந்திருந்தான்.யாருக்கும் எந்த சந்தேகமும் எழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்தவனாய் சற்றே முகத்தை மறைத்தவாறே வாசலை அடைந்தவன் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான்.
இரண்டு நிமிடத்தில் கதவு திறக்க மறுபுறம் முன் ஐம்பதுகளில் ஒருவர் நின்றிருந்தார்.ரினிஷாவின் தந்தையாய் இருக்க வேண்டும்.அப்படியே இவரின் பெண் உருவம் தான் ரினிஷா எனுமளவிற்கு முக ஒற்றுமையிருந்தது.
“யாரானு?”
“ஹாய் அங்கிள்”,என்றன் கேப்பை கழற்றியவாறு அவரைப் பார்த்து புன்னகைக்க ஒரு நொடி தடுமாறியவர் பின் சுதாரித்து அவனை உள்ளே வரவேற்றார்.