“ம்ம் இப்போ சொல்லு ஜி ஹெச்னு..லூசுப் பொண்ணே என்கிட்டேயாவது சொல்லிருக்கலாம்ல..”
“ஆத்வி பட்ட பாடெல்லாம் தெரிஞ்சும் நான் எப்படி உன்கிட்ட சொல்லுவேன்..ரேஷ் பாவமில்ல..அதான்..”
“அடிப்பாவி..கிராதகி..மகளே அப்படியே அங்கேயே உக்காந்து புட்டு சாப்டு தப்பி தவறி இங்க வந்த உன்னை கொன்னுடுவேன்..”
“ஜிகுட்டி என் செல்ல குட்டில நோ டென்ஷன்..சும்மா..”
“ம்ம் இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு குதூகலம்..நீ நடத்து மா..”
“இங்க என்ன ரணகளம்..என் ரேஷ்ஷை பார்த்து அப்பா டோட்டல் ப்ளட் தெரியும்ல..அண்ணனை மட்டும் தான் சமாளிக்கனும் அவன் கிடக்குறான் பாத்துக்கலாம்..”,எனும்போதே போனை அவளிடமிருந்து வாங்கியவனாய்,
“ஜி இவ்ளோ நேரம் அழுது அழுது பாவமா உக்காந்துட்டு உன்கிட்ட இந்த வாய் பேசிட்டு இருக்கா..”
“ஹா ஹா ரேஷ் ஆனாலும் நீங்க ஒரு அதிரடி ஹீரோனு ப்ரூவ் பண்ணிட்டீங்க போங்க..மச்சான் தான் பிரச்சனை பண்றாராமே ம்ம் சொல்லுங்க தூக்கிருவோம்..”
“ஹா ஹா சமாளிக்க முடியலைனா நானே அந்த ப்ளான்ல தான் ஜி இருக்கேன்..”
“என் இனமடா நீ..உண்மையா இப்போதான் கொஞ்சம் டென்ஷன் குறைஞ்சது..ஒரே நாள்ல இப்படி படுத்தி எடுத்துட்டா ரேஷ்..என் சார்பா அவளை நல்லா கவனிச்சுட்டு வாங்க..சென்னை வந்துட்டு பேசலாம் டேக் கேர்..”
அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் ரினிஷாவைப் பார்த்தவாறு,”ஜி அவ சார்பா உன்னை கவனிக்க சொல்லிருக்கா ரினி பேபி..”
“ஆனாலும் உங்களுக்கு இருக்குற லொள்ளு கொஞ்சம் அதிகம் தான்..இருக்குற நிலைமைக்கு ரொமான்டிக் லுக்வேற..”
அவன் பதில் கூற வரும் முன் ரினிஷாவின் தாய் சிற்றுண்டியோடு அங்கு வர அப்படியே பேச்சை நிறுத்தியவன் அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
தொடரும்...