உன்னோட என்.எஸ். ஜில வெச்சிக்கோ என்கிட்ட வேணாம் இப்ப உனக்கு என்ன தெரியணும் சாரவ நான் தான் கொல பண்ண ட்ரை பண்ணனேன் பண்ணிக்கிட்டு இருக்கேன் இனிமேலும் பண்ணுவேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று வெறியுடன் அவன் பேச சபாஷ் நீயே எல்லாத்தையும் ஒத்துகிட்ட அப்படியே ஏன் கொல பண்ண ட்ரை பண்ணறதையும் சொல்லிட்டனா எனக்கு காரணம் தேட வேண்டிய வேல கம்மியாயிடும் பாரு என்று கூறி கொண்டே அவன் மீது இருந்து எழுந்து அவனை தூக்கி எழுப்பினான் சாரவோட பாடிகார்ட்டா இருக்க இது கூட உனக்கு தெரியாதா உனக்கு தெரிஞ்சிரிக்கணுமே ஒரு வேல சாரா உன்கிட்ட சொல்லலயா ம் ம்… எப்படி சொல்லிருப்பா குடி போதைல கார ஓட்டி அப்பாவியான ஒரு சின்ன பொண்ண கொன்னுட்டு ஒன்னும் தெரியாத மாறி அவ பழிய டிரைவர் மேல தூக்கி போட்டுட்டு இப்ப சந்தோசமா சுதந்திரமா இருக்கா அவளுக்கு என்ன தெரியும் ஒரு உயிரோட வேல்யு பத்தி அவங்க குடும்ப நிலைமைய பத்தி திமிரு பிடிச்ச பணக்கார பிசாசுங்க…. இந்த விஷயத்த நான் கண்ணால பாக்கலனாலும் காதாலா கேட்டுற்கேன் என் தங்கச்சியோட இறுதி மூச்சு திணரலையும் அந்த சாரவோட பயத்தின் கதறலையும் போன்ல மறுமுனைல கேட்டுட்டுதான் இருந்தன் எனக்கு தெரியும் இந்த சட்டம் எனக்கு கை கொடுக்காதுனு அதான் நானே சட்டத்த கைல எடுத்தேன் என கோவம் கலந்த வலியுடன் கவின் கூறினான். இதை கேட்ட மன்வீர்க்கு இவன் யார் என்பது புரிந்து விட்டது கார் ஆக்சிட்டேன்டில் சாரா கொலை செய்த அந்த இளம்பெண்ணுக்கு நெருங்கியவனாக தான் இருக்க கூடுமென்று. நீ யாரு? உனக்கு ஜெனிய பத்தி எப்படி தெரியும்? ஜெனி உனக்கு என்ன வேணும்?? எதையும் மறைக்காம என் கிட்ட சொல்லு என மன்வீர் கேட்க இனிமேல் மறைக்க என்ன இருக்கு என் தங்கச்சி ஜெனி ரொம்ப சின்ன பொண்ணு அவளுக்கு பொய் சொல்ல தெரியாது மத்தவங்கள காயா படுத்த தெரியாது ரோட்ல இருக்க பூனை நாய் குட்டிய கூட வீட்டுக்கு தூக்கிட்டு வந்து அடைக்கலம் கொடுப்பா அம்மா இல்லாம செல்லமம்மா வளந்த பொண்ணு அப்பா,கவின் அண்ணா தான் உலகம்னு எங்களேயே சுத்தி சுத்தி வருவா அவளுக்கு என்ன கடைச்சாலும் அத முதல்ல எங்களுக்கு தான் தருவா தனக்கு கெட்டது செஞ்சவங்க கூட நல்லா இருக்கணும்னு தான் கடவுள் கிட்ட வேண்டுவா ஆனா அந்த கடவுளுக்கே கருணை இல்லாம போச்சு இல்ல இல்ல கடவுளே இந்த உலகத்துல இல்ல எல்லாம் சுத்த பொய் பொய் பொய் என்று கேட்டவர் கண்கள் கூட அருவி போல் கண்ணீர் கொட்டும் அளவிற்கு அவன் கூறியதை கேட்ட மன்வீர்க்கும் கண் கலங்கியது நெஞ்சை பிடித்து அழுது கொண்டிருந்த கவினின் தோலை தட்டி சமாதானம் செய்தான் மன்வீர் இத பாரு கவின் உன்னோட கவல என்னனு எனக்கு தெரியுது தான் நான் என்ன சொன்னாலும் உனக்கு அது
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 05 - நந்தினிஸ்ரீ
- Written by: NandhiniShree
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
53 - 106 minutes)
Page 24 of 25