ஏனோ அந்த சிறிது நேர காத்திருப்பே, அவளுக்கு அதிகம் போல் தோன்ற, புடவையின் முந்தானையை முடி போட்டு, பிரித்து என மாறி மாறி செய்தப்படி கட்டிலில் அறை வாசலுக்கு முதுகை காட்டியப்படி அமர்ந்திருக்க, சத்தமில்லாமல் அறைக்குள் வந்து கதவை சாத்தியவன், குனிந்து அவள் கூந்தலில் முகம் புதைக்கவும், அவள் எழுந்திருக்க, அவள் மீது வீசிய அதிகப்படியான வாசனையில், அவனுக்கு குமட்டுவது போல் இருக்க,
"நித்தி என்ன வாசனை இது.. இவ்வளவு மட்டமா இருக்கு.. முன்ன உன்கிட்ட இந்த வாசனை வரலையே, இப்போ தான் அடிச்சீயா? நேத்தே இந்த வாசனையெல்லாம் எனக்கு ஒத்துக்காதுன்னு சொன்னேன் இல்ல.. அது கொஞ்சம் கூட ஞாபகத்துக்கு வரலீயா.. பர்ப்யூமை அதிகமா யூஸ் பண்ணியிருக்க..
அய்யோ எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு.. அதுவும் மட்டமான வாசனையா இருக்கு.. நீ இப்படிப்பட்ட பர்ப்யூம் தான் யூஸ் பண்ணுவியா.. எவ்வளவு நல்ல மூடோட வந்தேன்.. ஒரு செக்ண்ட்ல எல்லாத்தையும் கெடுத்துட்ட.. இதை தெரியாம செஞ்சயா.. இல்ல வேணும்னே செஞ்சீயா.. இந்த ஸ்மெல்லோட உன்னோட பக்கத்தில் இருந்தா, தலைவலியில் சாக வேண்டியது தான்.." என்று சொல்லி, அலுவலக அறைக்குச் சென்று வேகமாக அவன் கதவை சாத்த, அவளோ பிரமை பிடித்தது போல் அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.
தொடரும்..