(Reading time: 15 - 30 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

கொஞ்சம் பொறுமையும் சகிப்பு தன்மையும் வேண்டும்.” என்றவர் தொடர்ந்து

“ஒரே நாளில் எல்லாம் சரியாகி விடாது. ஆனால் ஏதோ ஒரு நாளில் அனைத்தும் சரியாகிவிடும். அதுவரை காத்திருக்கலாம்… நாங்கள் இங்கு நிறைய வாய்தா தருவோம். இந்த உறவை தொடரணும் என்றாலும் முடிக்கணும் என்றாலும் காத்திருக்கத்தான் வேண்டும்” என்றார்.

“அதிதி… உங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னீர்கள். அப்போதே  நிறுத்தி இருக்கலாமே. இத்தனை சீரியஸாகும் வரை கொண்டு வந்திருக்க வேண்டாமே”

“----“

“இவரிடம் பேசி இருக்கலாமே”

“பேச வாய்ப்பு கிடைக்கவில்லை”

“சரி, அவருக்கு வேறு தொடர்பு உள்ளது எண்று நினைக்கிறீர்களா?”

“இல்லை”

“உங்களுக்கு வேறு எண்ணம் உள்ளதா”

“இல்லை… கிடையாது”

“உங்களை அவமதித்தாரா?”

“இல்லை நான்தான் அப்படி ஏதாவது செய்திருப்பேன்.”

“சரி, இப்போதாவது சரியான காரணத்தை சொல்லுங்கள்"

அவள் தயங்கினாள். உதடை கடித்து அழுகை வருவதை அடக்குவதுபோல பாவனை செய்தாள். பிறகு...

“நான்… நான்.. அவருக்கு உண்மையாக இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.” பல்லை கடித்துக் கொண்டு தொடர்ந்தாள்… “அவருக்கு துரோகம் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்”

முகம் வெளுத்து கண்கள் வியர்த்து மூச்சை இழுத்து பிடித்து கொண்டு பேசிய அதிதி அவனுக்கு முன் ஜெனிட்டாவாக தோன்றினாள்.

“உங்களுக்கு நான் உண்மையாக இருக்க மாட்டேன் அதிரத்…” இதைத்தானே அவளும் சொன்னாள். பின்பு… பின்பு  அவள் செத்து போனாள்….!

மை காட்… அவளைப்  போலவே அதிதியும்… ஓ நோ..! அவன் முகபாவனை மாறியதை பார்த்த கவுன்சிலர்.. ஒரு புன்னகை செய்தார். அவர் எதிர்பார்த்த சிக்னல் கிடைத்து விட்டதுபோல…

அவருடைய முடிவை எழுதினார். அந்த பேப்பரில் இருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை. அப்படி என்னதான் சொல்லியிருந்தார்.?

தொடரும்

Episode # 01

Episode # 03

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.