உங்க கிட்டேர்ந்து விடுதலைன்னு சொன்னேன். அதுக்கு பதிலா, நீ போற இடம் எல்லாம் சப்பாத்தின்ற பேரில் காய்ஞ்ச ரொட்டி தான் தின்னப் போறே அப்படின்னு சாபம் கொடுத்தாங்க. அது பலிச்சிடக் கூடாதுன்னு தான் வேகமா சாப்பிடுறேன்”
ஹ ஹ என்று சிரித்த ப்ரித்வி “ரொட்டி ரொம்ப ஹார்ட்டா இருக்க, வெண்ணைய் வேணா எடுத்துத் தரவா ?” என்றுக் கேட்டான்.
“அது எல்லாம் வேணாம் பாஸ். இந்த டால்ல உடைச்சுப் போட்டு ஊறப் போட்டுட்டேன். சோ டோன்ட் வொர்ரி” என்றாள்.
அவளின் பேச்சைக் கேட்டுச் சிரித்தவன், அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
பிறகு இருவரும் தங்கள் அறைக்குச் செல்ல நடந்தனர்.
ப்ரித்வி “கிருத்தி, செல்வத்தைப் பிடிக்க பிளான் செய்து ரெடி” என்றான்.
“சூப்பர். என்ன பிளான்? எனக்குச் சொல்லலமா?
“உனக்குச் சொல்லாமலா? உன்னை வைத்துத் தான் பிடிக்கப் போறோம்?”
அதைக் கேட்டதும் கிருத்திக்கேச் சற்று நடுங்கியது. உண்மையில் ப்ரித்விக்கே பெரும் தயக்கம் தான். என்றாலும் வேறு வழி இல்லை. நேருக்கு நேர் அந்த செல்வமே இறங்கி இருந்தால் இத்தனை நேரம் அவன் சிறைச் சாலையில் இருந்து இருப்பான்.
ஆனால் அவனோ மறைந்து இருந்து திட்டம் தீட்டுகிறான். எனவே அவனைப் பிடிக்கப் பணயம் வைத்தால் தான் முடியும். அதிலும் கிருத்தியைப் பணயம் வைத்தால் மட்டுமே அவன் சர்வ நிச்சயமாக வெளியே வருவான்.
ஏற்கனவே தெரிந்தது என்றாலும் அதன் செயல் வடிவம் கேட்க உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இருந்தாலும் தெம்பை வரவழைத்துக் கொண்டு,
“எப்படி பாஸ்?” என்றுக் கேட்டாள்.
“நாளைக்குச் சாந்தினி சௌக் மார்க்கெட் எல்லோரும் போறோம். அங்கே மூணு பஜார் இருக்கு. எல்லோரும் பிரிஞ்சிப் போய் வேணுங்கறத முடிச்சிட்டு திருப்பி மெயின் என்ட்ரன்ஸ் வரணும்னு சொல்லப் போறோம். நீ யாரும் கவனிக்கதப்போ மெதுவா அங்கே இருக்கிற பதேபூர் பஜார் போ. உனக்கு முன்னாடியே அங்கே நம்ம ஆட்கள் எல்லாம் வேறு வேறே வேஷத்தில் இருப்பாங்க. நீ தனியா வரும்போது செல்வத்தின் ஆட்கள் உன்னைக் கடத்துவாங்க. அதற்குப் பிறகு உன்னை செல்வத்துக்கிட்டே சேர்க்கிற வரை எங்க ஆட்கள் உன்னைப் பின் தொடர்ந்து வருவாங்க. நான் பிறகு தான் உன்னைத் தேடி வருவேன். நீ செல்வத்தை மீட் பண்றப்போ அவனை சுற்றி வளைத்துப் பிடிக்கப் போகிறோம்.”