(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நியூஸ்ல போட்டத பாத்தேன்  சாரா போன நேரத்துல எனக்கு அட்டாக் வந்த மாரி நடிச்சேன் டாக்டர இதுக்கு யூஸ் பண்ணிட்டேன் நான் போட்ட இந்த நாடகத்த  முருகேசன வெச்சி நடத்தி முடிச்சேன் நான் எந்த ஊழல் கேசுளையும் மாட்டலப்பா உன்ன இனியாக்கு கல்யாணம் பண்ணி வைக்க போட்ட நாடகம்ப்பா இதெல்லாம் அதனால தான் ஈஸ்வர் கிட்டயும் இனியாகிட்டயும் கல்யாணம் ஆகுற வெரிக்கும் உன்ன பேச விடமா நானும் முருகேசும் போட்ட திட்டம்ப்பா இதுல அவங்க ரெண்டு பேருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல அதுவும் அந்த பொண்ணு இனியாக்கு இத பத்தி ஒன்னும் தெரியாதுப்பா   அந்த பொண்ண புரிஞ்சிக்கோ தம்பி நான் பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை கடைச்சிருச்சு பாவம் தப்பே செய்யாம அந்த பொண்ணு எதுக்குப்பா கஷ்ட படனும்  உன்ன அந்த பாவி கிட்ட இருந்து காப்பாத்த தான் அப்பா உன் கிட்ட பொய் சொல்லி ஏமாதுன்ன என்ன மன்னிச்சிருப்பா  இது தான் தம்பி நடந்துச்சு என தங்க வேலு  நடந்த முழு கதையை சொல்லி முடித்தான்.

இதையனைத்தையும் கேட்ட வேதின் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியது என்ன மன்னச்சிருங்கப்பா எனக்காக நீங்க இவளோ பன்னீர்க்கீங்க இத புரிஞ்சிக்காமா நான் போய் உங்கள சந்தேக பட்டுட்டேன் ஐ அம் சாரிப்பா இவளோ நடந்தும் நீங்க ஏன் பா அந்த தேவேஸ்வரோட கிலோஸ்சா இருக்கீங்க என்ன கொல்லனும் நினைச்ச அவன் கூட போய் ஏன்ப்பா?? என வேத் கேட்க நீ  சாராவ  இன்னும் விடாம தொறத்துறது தேவுக்கு தெரியும்ப்பா அவன் கிட்ட இருந்து உன்ன காப்பாத்த தான் அவன் பக்கத்துலயே இருக்கன் ஆரம்பித்துல இருந்தே நாங்க ஒண்ணா சேந்து எல்லா தப்பையும் பண்ணிட்டோம் அதுல இருந்து பாதிலேயே வர முடியதுப்பா சிலந்தி வல மாரி மாட்டிக்கிட்டா வெளிய வர்றது கஷ்டம் அப்படி வந்தாலும்  அவங்க ரகசியங்களாம் தெரிஞ்ச நம்மள  நிம்மதியா வாழ விட மாட்டாங்கப்பா தம்பி  உன் நிலமைல யார் இருந்தாலும் இத தான் இப்படிதான் நினைச்சிறுபாங்கப்பா அழாதா தம்பி நான் பண்ண தப்புக்கு நான் அனுபவிக்குறேன் என்னால இனி வெளிய வர முடியாது  நீ தேவை இல்லாம என்ன பத்தி நினச்சு உன் உடம்ப கெடுத்துக்காதப்பா என வேலு சொல்லி கொண்டிருக்க ஹலோ மிஸ்டர் தங்க வேலு உங்க டைம் முடிஞ்சிடுச்சு வாங்க போலாம்மென ஆபிசர் வேலுவை அழைத்து செல்ல வேதின் கன்னத்தை தடவி சென்ற வேலுவை பார்த்து அப்பா யூ ஆர் தி கிரேட்ஸ்ட் டாட் என கூறினான் வேத்.

சே….இப்படி ஆயிடுகிச்சே தேவ் நம்ம வேலு இப்படி போய் மாட்டிக்குட்டானே டேம் இட்  ஏய் மூர்த்தி நீ என்ன கிளிச்சுட்டு இருக்க ஒரு போலீஸ்  கமிஷன்னரா  இருந்துட்டு ஒரு இன்போர்மஷன் கூட தெரியாதா உன்னால பாரு இப்ப அநியாயமா  வேலு மாட்டிக்குடன் அவன் வாய தொறந்தா நம்ம எல்லாரும் காலி அவ்வளவுதான் தெரிஞ்சிக்கோ இப்ப என்ன பண்ண

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.