இப்படி எல்லாத்துலேயும் உங்களை விட நான் ரொம்பவே குறைவு தான், இதில் வயசும் குறைவு, பக்குவமும் குறைவு. மொத்தத்தில் உங்களை நான் ரொம்பவே கஷ்டப்படுத்தறேன். கோபப்பட வைக்கிறேன்.
உங்களுக்கு பொருத்தமான பொண்ணுங்க எத்தனையோ பேர் இருந்திருப்பாங்களே மாமா, அப்படி ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சுக்காம பாட்டி சொன்னாங்கன்னு என்னை ஏன் கல்யாணம் செய்துக்கிட்டீங்க? நீங்க பாட்டிக்கிட்ட எனக்கும் நித்யாக்கும் எத்தனை வயசு வித்தியாசம், நான் எப்படி அவளை கல்யாணம் செய்துக்கறதுன்னு தானே கேட்டீங்க? அப்புறம் ஏன் ஒத்துக்கிட்டீங்க?
எனக்கு தெரியும் பாட்டி தான் கட்டாயப்படுத்தியிருப்பாங்க, அதனால தான் நீங்க என்னை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டீங்க, இல்லன்னா உங்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத என்னை கல்யாணம் செய்துக்க தோனியிருக்குமா?
உங்க தாத்தால இருந்து, உங்க சொந்தக்காரங்க எல்லோருக்குமே நான் உங்களுக்கு பொருத்தமில்லாதவன்னு தோனியிருக்கு, ஏன் நம்ம வீட்டு வேலைக்காரங்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு, நேத்து வீட்டுக்கு வந்தவனுக்கு கூட என்னை ஏமாத்தலாம்னு புரிஞ்சி தான் வந்திருக்கான். ஆனா இந்த பாட்டிக்கு தான் இது புரியல, என் மேல இருக்க பாசத்தில் என்னை உங்களுக்கு கட்டி வச்சு உங்களுக்கு அநியாயம் செய்துட்டாங்க,
ஆனா அதுக்காக இதெல்லாம் இனியும் நீங்க பொறுத்துக்கணும்னு அவசியமே இல்ல மாமா. என்னை விவாகரத்து செய்துட்டு உங்களுக்கு பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கோங்க, நான் அம்மாக்கூட நாங்க இருந்த ஊருக்கே போயிட்றோம், முதலிலேயே நாங்க இங்க வராம இருந்திருந்தா, உங்க வாழ்க்கை நல்லா அமைஞ்சிருக்கும்," என்று தன்னை தாழ்த்திக் கொண்டு நித்யா பேசியப்படி இருக்க, அவள் மனதிலிருப்பது வெளியே வரட்டும் என்று கார்த்திக் அமைதியாக அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
தொடரும்..