பிறகே நீ தப்பித்து விட்டச் செய்திக் கிடைத்ததும் உன்னைத் தேடி அரண்மனை வாயிலிலே காத்து இருந்தேன். பிறகு ஜோதா ராணி கோட்டைக்குள் சென்று திரும்பும்போது அவர்களின் பணிப்பெண்களில் ஒருத்தி மற்றும் வேறு யாரோப் போன்றுத் தோன்றியது. எனவே உங்கள் சிவிகையைத் தொடர்ந்து உன்னைக் கண்டுக் கொண்டேன்” என்றுப் பேசி முடித்தனர்.
அதற்குப் பிறகு ராணியும், இளவரசனும் பேசிக் கொண்டே வர, ராம்சிங் காமினி, நால்வருமாக அற்புத ஆரண்யத்தின் எல்லையைத் தொட்டு இருந்தனர்.
இளவரசன் வரும் வரை ஆரண்யத்தின் மேல் மலையில் பாசறை அமைக்கச் சொல்லியிருந்தவன், தற்போது அடிவாரம் முழுதும் போர்ப் பாசறையாக மாற்றி விட்டு இருந்தார் மகாராணா.
இளவரசன் , ராணாவிடம் ஏன் என்பது போல் கேட்க,
“எனக்குக் கிடைத்தத் தகவல் படி , இனி எந்நேரம் என்றாலும் போர் இருக்கலாம் என்பது தான். மலையில் இருந்து கீழே இறங்கி நம் வீரர்கள் போருக்குத் தயாராவதை விட்டு ஓய்வு என்று எடுத்துக் கொண்டால் , போர் தாமதப் படுவதோடு பெரும் அசம்பாவிதங்களும் நடைபெறும்” என்றுக் கூறவும், இவர்கள் நால்வரும் என்ன சொல்வது என்று விழித்தனர்.
.தற்போதோ , கிருத்திகா அந்த செல்வம் கையில் அகப்பட்டு இருக்க, செல்வமோ கிருத்திகாவிடம் பேசியது எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லமால் இருந்தது.
அப்போதுதான் கூர்ந்து கவனித்தக் கிருத்திகாவிற்கு அவன் போதை மருந்து உட்கொண்டு இருந்ததைப் புரிந்துக் கொண்டாள். இது தனக்கு சாதகமாக இருக்குமா, அல்லது பாதகமாக இருக்குமா என்று யோசித்துக் கொண்டு இருக்கையில், அவனின் போன் அடிக்க, அவனோ எடுத்துப் பார்த்தான்.
அங்கே என்ன சொல்லப் பட்டதோ , போனைத் தூக்கி எறிந்தான் செல்வம்.
தொடரும்!