வாங்குற மாரி ஒருத்தர் போனா இன்னொருத்தர்னு ஒடனே ஒடனே யார்கிட்டயும் பிரின்ட் ஷிப் வெச்சிக்க கூடாது என மன்வீர் சொல்ல இதுல என்ன இருக்கு கார் ஓடலான நம்ம கன்ட்ரோல்ல இல்லனா மாத்தி தான் ஆகணும் அதையே வெச்சிகுட்டு இருந்தா நம்ம நிம்மதி தான் போகும் என சாரா சொல்ல கார் சரி இல்லனா சர்வீஸ் பண்ணனும் அது ஏன் ஓடலன்னு பஸ்ட்டு காரணம் தெரிஞ்சிக்கணும் அத விட்டுட்டு அத கொற சொல்றது மாத்துறது முட்டாள் தனம் என மன்வீரும் சாரவும் மாரி மாரி விவாதம் செய்து கொண்டிருக்க அவர்களை மாரி மாரி நோட்டம் விட்டான் வேணு.
என்னடா இது இவங்க ரெண்டு பேரும் என்ன பேசுராங்க சம்மந்தமே இல்லம்மா அவன் ஒன்னு சொல்றான் அதுக்கு இவ ஒன்னு சொல்றா நம்மல வெச்சி எதாவுது கேம் பிலே பணராங்களோ ஷு ஷப்பா...ஒன்னும் புரியல டா சாமி என மைண்ட் வாய்சில் பேசி கொண்ட வேணு ஸ்டாப் இட் ...நிறுத்துங்ககக கக...... இப்ப எதுக்கு ரெண்டு பேரும் மாரி மாரி சண்ட போட்டுக்குறீங்க நான் ஒருத்தன் இங்க இருக்குறது உங்க கண்ணுக்கு தெரிதா இல்லயா சரி சாரா தேவ இல்லாத விஷயத்த பத்திலாம் பேசி நான் என் மூட ஸ்பாயில் பண்ண விரும்பல நான் உன்ன இப்ப எங்க கூட்டிட்டு போக போறன் தெரியுமா லவ் இன் ஏர் ரெஸ்டாரண்ட்க்கு சும்மா பிலைட் தீம்ல செட்டிங் இருக்கும் அப்படியே வானத்துலயே பறக்குற மாரி இருக்கும் நாமா சும்மா பறந்துகிட்டே ரொமான்டிக்கா பேசலாம் இதோ ரெஸ்டாரண்ட்டே வந்துருச்சு வா சாரா பேபி நான் முன்னாடி இறங்குறேன் நீ எனக்கு பின்னாடி இறங்கி என் கையோட கை கோத்தினா நாமாசும்மா கெத்தா உள்ள போலாமென சொல்லி வேணு வழிந்து கொண்டே காரை விட்டு இறங்கினான்.
என்ன சாரா இன்னும் இறங்காம கார்ல என்ன பண்ற என வேணு திரும்பி பார்த்த போது ஐயயோ.... என்னடா இது காரா காணும் சாரவையும் காணும் திரும்பி பாக்குற சைக்கிள் கேப்ல என்னடா இது ஜி பூம் பா மாரி காரு மாயமா போச்சு எங்க இந்த போன்னு என கோட்டை தடவி தடவி பார்த்து ஓ மை காட் இந்த போனையும் பர்ஸையும் இடைஞ்சலா இருக்குன்னு சொல்லி கார் பிரின்ட் சீட்ல வெச்சிடனே சை இப்ப என்ன பண்றதுடா சாமி என வேணு புலம்பி கொண்டிருந்தான்.
ஏய் மன்வீர் ஏய் எங்க போற காரா நிறுத்து மரியாதையா இப்ப நிறுத்த போறியா இல்லையா என அருகில் இருந்த குஷனை எடுத்து சாரா மன்வீரை அடிக்க காரை ஹயிவல் வேஸ் ஓரத்தில் நிறுத்தினான் மன்வீர்.என்ன நீ இல்லனா என்னால போக முடியாத என்று சொல்லி கொண்டே காரிலிருந்து வெளியே கோவமாக இறங்கினால் சாரா நில்லு சாரா நில்லு நான் சொல்றத கேளு நீ என்ன பண்றன்னு தெரிஞ்சி தான் பண்றியா உனக்கு யார் கிட்ட எப்படி