தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 12 - நந்தினிஸ்ரீ
டு ம்ம்ம் என்று பாம் வெடித்த சத்தத்தை கேட்ட வேத் வேனுடன் சேர்ந்து வேலு எரிந்து கொண்டு இருப்பதை பார்த்து அப்பா பா பா பா...... என அலறி கொண்டு வேனை நோக்கி ஓடி வந்தான் அவன் வேனின் அருகில் நெருங்கும் மோது கவின் ஓடி வந்து அவனை தடுத்து நிறுத்தி இழுத்து பிடித்தான்.அப்போது மூச்சு வாங்க ஓடி வந்த மன்வீர் கடும் புகையுடன் எரிந்து கொண்டிருந்த வேனை பார்த்தான் ஒரு பக்கம் கதறி அழுது கொண்டிருந்த வேதையும் மறுமக்கம் வேலுவின் கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் எதுவும் புரியாமல் ஆங் ஆங்கே பயந்து ஓடி கொண்டு இருப்பதையும் போலீஸ் தீயை அணைக்கவும் அதன் அருகில் யாரும் வராமல் இருக்க தள்ளி போங்க தள்ளி போங்க என எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வக்கீல்கள் சிலர் கருப்பு கோட்டுடன் கோர்டுக்குள் இருந்து இதை பார்த்து என்ன ஆச்சு யார் இப்படி பண்ணிருப்பா என்ன கேஸ் இன்னிக்கு என டிஸ்கஷன் செய்து கொண்டிருக்க பாம் பாம் பாம் என தீயணைப்பு வண்டி ஒலி எழுப்பி கொண்டு ஸ்பாட்டுக்கு வர மொத்ததில் அந்த இடமே பர பரப்புடன் காணப்பட்டது.
உண்மையை வெளி கொண்டு வர வேண்டு மென்று மன்வீர் செய்த முயற்சி அனைத்தும் தூள் தூளானது அது போக தங்க வேலு இறந்து விட்டார் வேதுக்கு தான் கொடுத்த வாக்கு நிர்மூலமாகி விட்டது தன்னால் ஒரு உயிர் அநியாயமாக போனது வேதுக்கு என்ன பதில் சொல்வது எப்படி தேவேஸ்வர் தண்டனை வாங்கி தருவது டாக்டரின் முக திறையை எப்படி கிளிப்பது சாரவையும் மற்றவர்களையும் எப்படி தேவேஸ்வரிடம் இருந்து காப்பாற்றுவது என பல கேள்விகள் மன்வீரின் மனது அவனுக்குள்ளே கேள்விகள் கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆ ஆ ஆ.... என கத்தி கீழே விழுந்தான் மன்வீர்.
திவான் ஹாஸ்பிடல் லேபிள்....
என்ன ஜெய் ரொம்ப நேரமா எதையோ விழுந்து விழுந்து தேடிட்டு இருக்க போல ஆமா என் ரொனால்டோ எங்க காணோம்??? ஓ அவன் உன்ன எதுவும் பண்ண விடாம ஆடா விட்டு ஓட விட்டு ரொம்ப கஷ்ட படுத்திடனோ சரி நீ தேடுன ஏவிடென்சஸ் கடச்சிருச்சா என தன் கோட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த எனர்ஜி ட்ரிங்கை எடுத்து லிட்டை ஓபன் செய்து கூலாக குடித்தான் பிரசாந்த். அது அது வந்து டாக்டர் ஒன்னுமில சும்மா தான் வந்தேன் என ஜெய் பயத்தில் உளர என்ன என்ன என்னாச்சு ஜெய் எப்பயும் தெள்ள தெளிவா பேசுற இன்னிக்கு நீ இப்படி உளருலாமா ...எப்படியோ என்னோட ஏவிட்டேன்ஸ் வெச்சிருக்க லாக்கர கண்டு பிடிச்சி ரோனோவ அடக்கி பாஸ்வார்ட மண்டைய பிச்சி பேப்பர பிரட்டி கண்டுபிடிச்சி ஓபன் பண்ணிட்ட பட் அவளோ பண்ணி என்ன பிரயோஜனம் அதுக்குள்ள தான் ஒன்னுமிலயே ச்சு... ச்சு.... சோ சேட் என பிரசாந்த் உச் கொட்ட தன்னை பற்றியும் அவருக்கு பின்னால் நடக்கும்