மட்டும் வாங்கி கொடுங்க" என்று விட்டு மருத்துவர் கிளம்ப, "சத்யா நீ போயி மெடிசின் வாங்கிட்டு வா. நான் கஞ்சி செய்து வைக்கறேன்" லட்சுமி சத்யாவிடம் சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி செல்ல, வாடிய மலராக கிடைக்கும் பவித்ராவின் அருகே சென்றான் சத்யா. அவளருகே அமர்ந்தவன் மெல்ல அவளின் நெற்றியில் கையை வைத்து பார்த்தான். சூடாக இருந்தது. மெல்ல அவளின் தலை முடியை கோதியவன் "உனக்குள்ள என்ன இருக்கு பவி? எதுக்காக நீ பயந்த? நான் உன் கூட இருக்கேன் பவி. நீ எதுக்கும் பயப்படாம இரு" தன் மனதில் பேசுவது அவளுக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் அவன் பேச, அவளின் கை அருகே இருந்த அவனின் விரல்களை அழுந்த பிடித்தது.
"அம்மா" அவளின் வாய் முணுமுணுக்க, அவனின் கைகளை விடாமல் பற்றினாள் பவித்ரா.
மெல்ல அவள் தலை கோதி அவளை ஆசுவாசப்படுத்தியவன், அவள் நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடைய கையை விடுவித்தான்.
"மாமா, அக்கா ஏன் தூங்கும்போது கத்துனா?" மிரண்டு போய் நின்று கொண்டிருந்த உமா கேட்கவும், "ஒண்ணும் இல்லைடா. அக்காக்கு பீவர் அதனால தான். இப்போ தூங்கிட்டாங்க.நீயும் தூங்கு."என்றவன் அறையை விட்டு வெளியே சென்றான்.
கண்களை திறந்த பவித்ரா மெல்ல எழுந்து அமர்ந்தாள். ஜன்னலின் திரைசீலை வழியே வந்த சூரிய வெளிச்சம் அவளின் கண்களை கூச செய்தது. உடல் அசதியால் அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. மெல்ல எழுந்து ஜன்னல் அருகே சென்றாள். திரைசீலையை விலக்கி பார்க்க, வெயில் சுளீரென அடித்தது.
"இவ்வளவு நேரம் தூங்கி விட்டேனா என்ன" அதிர்ச்சியோடு நேரம் பார்க்க, அது மூன்று என காட்டவும், "மதியம் மூன்றா?" என குழப்பத்தோடு நிற்க, உள்ளே நுழைந்த லட்சுமி "என்னடா எழுந்திட்டியா? எப்படி இருக்கு இப்போ. வா வந்து உக்காரு. சூடா சூப் கொண்டு வந்துருக்கேன். கொஞ்சம் குடி. அப்போ தான் நிக்கவாச்சும் தெம்பு கிடைக்கும்"என்றவர் அங்கிருந்த டேபிளில் சூப்பை வைத்தார்.
அவளின் முகத்தில் குழப்பத்தை கண்டவர், அவளின் கைபிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தார். களைந்து கிடந்த தலை முடியை வாரி அதை ஒரு ரப்பர் பேண்டில் அடக்கியவர், "ரெண்டு நாளா பீவர், கண்ணையே திறக்கலை. நானும் சத்யாவும் தான் மாறி மாறி இங்க இருந்தோம். " அங்கிருந்த சூப்பை அவளின் கைகளில் திணித்தவர் சொல்லவும். "பீவர்ரா?? ரெண்டு நாளாவா?" அப்போது தான் எதிரே தெரிந்த கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.
"சாரி மா" வந்த இடத்தில் இப்படி அவர்களுக்கு சங்கடம் தருகிறோம் என்ற குற்ற