உணர்வில் மன்னிப்பை கேட்டாள் பவித்ரா.
"எதுக்கு சாரி?" அவள் சூப் குடிக்காமல் இருப்பதை கண்ட லட்சுமி ஒரு ஸ்பூன் எடுத்து அவள் வாயில் வைக்க, கண்கள் கலங்க பார்த்தாள் பவித்ரா அவரை.
"என்னாச்சு பவி, காரமா? சூடா இருக்கா?" அவளின் கண்கள் கலங்குவதை கண்டவர் பதற்றமாக கேட்க, "இல்லை" என தலை அசைத்தவள் அவர் ஓரொரு ஸ்பூனாக ஊட்ட அமைதியாக வாங்கி குடித்தாள்.
அவளின் மனம் காய்ச்சலால் பலவீன பட்டு இருந்தது. அதற்க்கு மருந்திடுவதை போல லட்சுமி நடந்து கொண்டது அவளுக்கு அவள் அன்னையை நினைவூட்டியது.
அவள் குடித்து முடித்ததும் அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தார் லட்சுமி.
"அப்பாடா இப்போ தான் பீவர் இல்லாம இருக்கு. பயப்படுத்திட்ட பவி. பாவம் உமா தான் ரொம்ப பயந்துட்டா. சத்யா தான் சமாதான படுத்தி ஸ்கூல்ல கொண்டு போயி விட்டான்." லட்சுமி சொல்லவும் "சாரி மா. உங்களை ரொம்ப சிரம படுத்திட்டேன்" பவித்ராவின் மன்னிப்பை கேட்டவர், "என்னமா இதுக்கெல்லாம் சாரி சொல்லுவியா. இதுல என்ன சிரமம் இருக்கு? சத்யாக்கு முடியலைன்னா நான் பாக்க மாட்டேனா? ரெண்டு பேரும் எனக்கு ஒரே மாதிரி தான். இன்னும் சொல்ல போனா அவன் கூட இருந்ததால எனக்கு பெருசா எந்த வேலையும் கொடுக்கல. கஞ்சி வெக்கறது, உனக்கு டிரஸ் சேஞ் பண்றது மட்டும் தான் நான் பண்ணேன். நைட் என்னையும் உன் கூட தூங்க சொல்லிட்டு அவன் தான் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை டெம்பெரச்சர் பாக்கறது மருந்து கொடுக்கறது எல்லாம் பண்ணான். அதனால எனக்கு ஒரு சிரமமும் இல்ல." லட்சுமி சொல்ல, பவித்ராவுக்கு இன்னும் சங்கடமானது.
அவன் இதெல்லாம் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவனை பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருக்கும் போது அவனை தவிர்ப்பது எளிதாக இருந்தது அவளுக்கு. இப்போது அவன் அவளை மேலும் மேலும் நன்றி கடனுள்ளவளாக மாற்றி கொண்டிருக்கிறானே.
இவள் யோசனையில் இருக்க, "அது சரி நீ ஏன் நடு ராத்திரில குளிச்சிட்டு ஈர ட்ரெஸ்ஸோட நின்ன?" லக்ஷ்மியின் கேள்வியில் அதிர்ந்தவள் என்ன சொல்வதென்று புரியாமல் தலை குனிய, அவளின் மன நிலையை மாற்ற எண்ணியவர், "சரி வா பவி. இந்த ரூம்லயே இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும். நம்ம வெளியே போயி உக்காரலாம்" என்றவர் அவளையும் அழைத்து கொண்டு வெளியே வந்தார் லட்சுமி.
"நீ டிவி, மூவிஸ் இந்த மாதிரி ஏதாவது பாப்பியா? " -லட்சுமி