"அக்கா அக்கா" உமாவின் உலுக்கலில் நினைவிற்கு வந்தவள், சுதாரித்து கொண்டு கண்ணை துடைத்தாள்.
"போட்டோ குடுக்கா.அம்மா அப்பா ஞாபகம் என்கிட்டே இது மட்டும் தான் இருக்கு." என்றவள் பவித்ராவின் கையில் இருந்து அந்த புகைப்படத்தை வாங்கி புத்தகத்தின் நடுவே வைத்து கொண்டாள்.
அவள் கையில் இருந்து அந்த புகைப்படத்தை நீக்கினாலும் அது அவள் கண்ணிலேயே நின்றது. அந்த புகைப்படம் பற்றி நினைக்க நினைக்க அவள் உடல் எல்லாம் கூசியது. எழுந்து சென்று குளியலறையில் தண்ணீரை திறந்து விட்டு கொண்டு நின்றாள். எத்தனை நேரம் நின்றாலும் அந்த கறை போகவே இல்லை. உடல் சில்லிட்டு போனது. வெளியே இருந்து உமா அழைக்கும் குரல் கேட்கவும் தன்னிலை உணர்ந்தவள் அங்கிருந்த துவாலையால் துடைத்து கொண்டு வெளியே வந்தாள்.
"என்னக்கா இவ்ளோ நேரமா குளிக்கிற? ஏன் டிரஸ் எல்லாம் ஈரமா இருக்கு. " உமாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை பவித்ராவால்.
"நீ தூங்கு உமா. நான் டிரஸ் மாத்திட்டு வரேன்" நடுங்கும் குரலில் சொன்னவள் உடல் மாற்றி கொண்டு வந்து உமாவின் அருகே படுத்தாள். அதற்குள் உமா உறங்கி போயிருந்தாள். பவித்ராவுக்கு உறக்கம் வராமல் தவித்தாள்.
கும்மிருட்டு, தூரத்தில் நாய்கள் ஊளையிடும் சத்தம், காலில் கல்லும் முள்ளும் குத்த ஓடுகிறாள் பவித்ரா. "நில்லுடி நில்லு" அவளை யாரோ பின்னால் துரத்துவதை போல இருந்தது. திரும்பி பார்க்காமல் முடிந்தவரை வேகமெடுத்து ஓடுகிறாள். அவள் கட்டியிருந்த பாவாடை இடறி கீழே விழ அவளை துரத்தும் காலடி சத்தம் இப்போது அருகே கேட்க, "ஐயோ எனக்கு பயமா இருக்கு. அம்மா அம்மா" கத்தினாள் பவித்ரா.
"பவி பவி இங்க பாரு பயப்படாத" லட்சுமி பவித்ராவின் கன்னங்களை தட்டி கொடுத்தார். பவித்ராவின் சத்தத்தில் பயந்து போன உமா ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தாள்.
"சத்யா சீக்கிரம் டாக்டர்க்கு போன் பண்ணு. உடம்பு அனலா கொதிக்குது..."கண்களை திறக்காமல் "அம்மா அம்மா" என அரற்றும் பவித்ராவை கண்டவனது நெஞ்சம் விம்மி புடைக்க, வேகமாக தன்னுடைய கைப்பேசியை எடுத்து மருத்துவரை அழைத்தான்.
"பீவர் கொஞ்சம் அதிகமா இருக்கு. இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். நல்லா தூங்கட்டும். காய்ச்சல்ல தான் ஏதோ உளறிருக்காங்க. கொஞ்சம் வீக்க்கா இருக்காங்க. எழுந்ததும் கஞ்சி, சூப் அந்த மாதிரி ஏதாவது கொடுங்க. திரும்ப நான் ஈவினிங் வரேன். இந்த மெடிசின்ஸ்