(Reading time: 13 - 25 minutes)
Kaarigai
Kaarigai

அணைத்து செல்ல அந்த தெருவில் இறங்கி நடக்க தொடங்கினாள் பவித்ரா.

கண்களில் கண்ணீர் வழிய கால்கள் அதன் போக்கில் நடக்க தொடங்கியது. தூரத்தே கேட்ட நாயின் குரல், இருளில் கத்தும் பூச்சிகள் என எல்லாமும் அவளை நடுங்க வைக்க, கால்போன போக்கில் நடந்தாள்.

"இதெல்லாம் கனவாக இருக்குமோ? இல்லை அத்தை என்னை வீட்டை விட்டு அனுப்ப ஏதோ ஒரு காரணம் வேண்டும் என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னது போல இல்லை" ஏதேதோ யோசித்து கொண்டு சென்றவள் முன்னே வந்து நின்றனர் இருவர், போதையில் தள்ளாடிய படி நின்ற இருவரின் கண்களும் அவள் மேல் ஊற அவளுக்கு உள்ளே நடுக்கம் பரவியது.

"என்ன பாப்பா நடு ராத்திரில தனியா போற? நாங்க வரலாமா? குளறியபடி கேட்க அவர்கள் இருவரையும் பலமாக பிடித்து தள்ளிவிட்டு ஓட துவங்கினாள் பவித்ரா.

"நில்லுடி" என்றபடி அவர்கள் இவளை துரத்துவது இவளுக்கு தெரிய, இருந்த பலமெல்லாம் திரட்டி கொண்டு ஓட துவங்கினாள். எத்தனை நேரம் ஓடினாலோ, ஏதோ ஒன்று கால்களை இடற, கீழே விழுந்தவள் தலை எங்கேயோ பட்டு ரத்தம் வழிந்தது. அது ஒரு ரயில்வே தண்டவாளம் என்று புரிந்தது.

"பேசாம செத்து போயிடலாமா? அத்தை சொன்ன மாதிரி என் வயித்துல ...என் வயித்துல ..."நினைக்கையிலேயே அவள் உடல் நடுங்க சாவதே மேல் என்று எண்ணியவள் மெல்ல எழுந்து அந்த தண்டவாளத்தில் நடக்க துவங்கினாள்.

Episode # 08

Episode # 10

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.