(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அஞ்சலையுடன் எதையா பேசப் போக.. அங்கு தான் துளசியின் விதி விளையாட்டை ஆரம்பித்தது.

"நீ ஏன் தனியா இங்கே இருக்கே. உன் மாமனார் வீடுதான் பெரிய வீடாச்சே. அங்கேயே இருந்திருக்கலாமே"

"அவங்கூட என்னால இருக்க முடியாது. ஏதாவது குறை சொல்லி கிட்டே இருக்காங்க. லேட்டா எந்திரிச்சா குற்றம்.. சமைக்க தெரியலைன்னா குற்றம்.. அதைவிட ஓயாம வீட்டு வேலை இருந்துட்டே இருக்கு."

"அதுக்காக இப்படி கழட்டிகிட்டு வந்திட்டா.. நாளைக்கு சொத்து எதுவும் கிடைக்காம போயிடும். அந்த ஆளு வேற சிங்கப்பூரு போய் சம்பாதிச்சிருக்காரு. சொந்த சம்பாத்தியம்.. அவரு நினைச்சா ஒரு பைசாகூட தர மாட்டேன்னு சொல்லலாம்."

"அதுக்கு.. அங்கே போய் வேலைக்காரியா இருக்க சொல்றியா?"

"விட்டு கொடுத்து போனால் என்னன்னுதான் கேட்கறேன். ஒன்னுமே இல்லாமல் நடுத்தெருவுல நிக்க போறியா?"

அவ்வளவுதான்... அஞ்சலை கோபமாக வெடித்தாள்.

"நடுத்தெருவிற்கு வந்துருவேனாஉனக்கு தெரியுமா அங்கே எனக்கு மரியாதையே கிடையாது. அந்த துளசி போட்ற பத்தினி டிராமானால என்னை யாருக்கும் பிடிக்கல. அவளை மாதிரி இரு.. அவள் நல்ல பொண்ணு.. அப்படி இப்படின்னு ஒரே அட்வைஸ் வேற. என்னால பொறுத்துக்கவே முடியல. உன்னாலதான இவனே கல்யாணம் பண்ணிகிட்டேன்."

"இல்லேன்னா எவனாவது ராஜகுமாரன கட்டியிருந்திருப்பநீயுந்தான் அந்த கிருபா பின்னால ஓடிட்டு இருந்தே. அவன் உன்னை திரும்பிகூட பார்க்கல. அவன நம்ப முடியாதுன்னு நினைச்சுதான் இவன கட்டி வச்சேன். இவனும் சொத்துகாரன்னு நினைச்சேன். உனக்கு கொஞ்சம் சாமர்த்தியமா நடந்துக்க தெரியணும்"

"அவ இருக்கறவரை என்னால முடியாது. அங்கே அவள் சொல்றதைதான் கேட்கறாங்க."

"சரி.. அவளை அடக்கி வக்க ஏதாவது பண்றேன். கொஞ்சம் அசிங்கப்பட்டா அடங்கிடுவா"

துளசியை அவமானப்படுத்த கன்னியம்மா போட்ட திட்டம் அவள் எதிர்பார்த்ததையும் தாண்டி கோரமாக செயல்பட்டது. 

கன்னியம்மாவிற்கு கை கொடுத்தது ஒரு மூலிகை மருந்து. அதை உட்கொண்டால் மூளையின் செயலாக்கத்தை பாதிக்கும். போதை மருந்தை எடுத்துக் கொண்டதுபோல தடுமாற வைக்கும்.

அதை வைத்து அவளை அவமானப்படுத்தலாம் என்று திட்டமிட்டாள். அதை செய்யும்போது வீட்டில் துளசியை தவிர வேறு யாரும் இருக்க கூடாது என்று சரியான சந்தர்ப்பத்திற்காக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.