(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவளும் பேசுவதில்லை.. இது இதயத்தின் ஆழத்தில் ஏக்கமாக நின்றது...

அப்படிப்பட்ட நிலையில் அவன் முன் 'முன்னி' விழுந்து கிடக்கவும் பதறி விட்டான்.

"அடிபடலைல.. கெட் அப்" என்று சொல்லி அவளை தூக்கினான்

கண்ணை கசக்கியபடி பார்த்த துளசி 'சுந்தரத்தின்' இந்த திடீர் கரிசனத்தால்  அழ ஆரம்பித்தாள் சுந்தரம் துளசி  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், அபிதா பிறக்கும்வரைதான் அந்த காதல் இருந்தது.. குழந்தைகள் பிறந்த பின்பு சுந்தரம் அவர்களிடம் பிணைப்பை அதிகரித்து கொண்டான்.

துளசியின் மனதிற்கு நெருக்கமாக அவன் நடக்கவில்லை.  குழந்தைகளின் அம்மாவாகவே அவளை நடத்தினான். அவள் மனதில் அது ஏக்கமாக தங்கி விட்டது. இப்போது அவனுடைய பதட்டமும் பரிவும் மனதில் இருந்த வலியை கிளறி விட்டன.அவள் அழுது கொண்டே இருந்தாள்.

"என்னாச்சுஅழாதே" என்றவன் தடுமாற்றத்துடன் அவளை தூக்கி சோபாவில் கிடத்தினான்

அவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு "என்னை விட்டு போகாதீங்க" என்று சொல்ல..

" உன்னை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் செல்லம்" என்று   அவன் சொல்ல..

அப்போதுதான் சுந்தரமும் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தான். ….

க்ருபாவின் பார்வையில் துளசி பிரியமான தங்கை முன்னியாக  தெரிய

துளசியின் பார்வையில் க்ருபா ஆருயிர் சுந்தரமாக தெரிய..

சுந்தரத்தின் பார்வையில் அந்த காட்சி தவறாகவே பதிந்தது. அவனுக்கு நண்பன் மீது நம்பிக்கை இருந்திருந்தால் அல்லது துளசியின் அன்பின்மீது நம்பிக்கை இருந்திருந்தால்அங்கே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சித்திருப்பான். ஆனால்.. அவன் சட்டென ஒரு முடிவிற்கு வந்து விட்டான்"சீய்.." என்றான்.

அந்த சத்தத்தில்  திரும்பிய துளசி இன்னொரு சுந்தரத்தை பார்த்து குழப்பமானாள். "சுந்தர்" என,

"முன்னி" என அழைத்து கொண்டிருந்த க்ருபாவும் "வாப்பா" என,

அதிர்ந்து நின்ற சுந்தரம்"பாவி.. என் குடும்பத்தை அழிச்சிட்டியேடா" என்று கத்தியபடி ஒரு அறைவிட

ஒரு கணம் நிலைக்கு வந்த க்ருபா கழுத்தை கட்டியிருந்த துளசியை பார்த்து பதறி விலகினான். அதே சமயத்தில் துளசியும்  துள்ளி எழுந்தாள்.

"சுந்தர்…" குளறலாக அழைத்தாள்.

"சீ நாயே" என்று சுந்தரம் அவள் முகத்தில் காறி உமிழ்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.