தூக்கி கொலை செய்ய முயற்சித்து கொண்டிருந்தான் தேவேஸ்வர்.
அவள் அருகே சென்று அவள் தடுக்க தடுக்க முத்தம் கொடுக்க தேவேஸ்வர் செல்ல
நோ ....நோ என சாரா பேச முடியாமல் திணறும் தருணத்தில் டிஷ்யூம்....என்ற சத்தம் அதை கேட்டவுடன் பதறி அடித்து கொண்டு ஓடி வந்த க்ரிஷும் வேதும் குழப்பத்துடன் ரத்த கரை படிந்த சுவருகள் தீப்பிடித்து எரியும் பகுதிகளையும் களைந்து போய் கிடக்கும் அலங்கோலமான வீட்டையும் பார்த்து கொண்டு யார் யாரை ஷூட் செய்தார்கள் என தெரியாமல் மூச்சை பிடித்து கொண்டு பதட்டத்துடன் ஓடி வந்தனர்.
வேத் மன்வீர்க்கு சாரவுக்கும் ஏதோ ஆகிவிட்டது என்ற பயத்தில் நடு நடுங்கி கொண்டு மேலே வந்து பார்த்த போது தலையில் இருந்து வியர்வை சொட்ட சொட்ட மன்வீர் அசையாமல் இரும்பு மனிதன் போல் நின்று கொண்டிருந்தான் பின் சற்று திரும்பி பார்த்த போது ஒரு ஓரமாக கதறி அழுது கொண்டிருந்த சாரவை பார்த்த பிறகு இருவருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதை அறிந்து பெரு மூச்சு விட்டான் வேத்
ஆனால் சற்று திரும்பி பார்த்த போது அதிர்ந்து போனான்
கையில் துப்பாக்கியை ஏந்தி கொண்டு வெறி கொண்ட முகத்துடன் கண்ணில் கண்ணீருடன் தேவேஸ்வர் நெஞ்சை குறி பார்த்து சுட்டு விட்டு மலை போல் இறுக்கமாக நின்று கொண்டிருந்தால் ரதி.
அடுத்த அத்தியாயத்துடன் முற்றும்