(Reading time: 22 - 44 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அது புற்றுநோய் மரபணுக்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி.  குரங்குகளிடம் முதலில் டெஸ்ட் செய்து அது வெற்றிகரமாக நடந்த பின் மனிதர்களிடமும் நடத்திப் பார்க்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது."

"இதுபோன்ற புதிய மருந்தை பயன்படுத்துவதற்கு யாராவது ஒப்புக் கொள்வார்களா?. பயமாக இருக்காதா?" என்று அதிதி வினவினாள்.

"சரிதான் அதிதி. ஆனால் இது போன்ற ஆராய்ச்சிகளை செய்வதற்கு சில தன்னார்வலர்கள் முன் வருவார்கள். அவர்களை வைத்தே நாங்கள் ஆராய்ச்சி செய்வோம். ஆனால் அதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருக்கும் ஆனால் நான் குறிப்பிடும் இந்த ஆராய்ச்சி ரகசியமாக அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது. எனவே தன்னார்வலர்கள் கிடைக்கவில்லை."

"அப்படியே நிறுத்திட்டாங்களா?"

"அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக ஆதரவற்றவர்களை…  ஏழைகளை வைத்து அதை செய்யலாம் என்று முடிவெடுத்து அதற்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார்கள். அவன் ஒரு ஆதரவற்ற சிறு பெண் குழந்தையினை கொண்டு வந்து தந்தான். அந்த குழந்தையை வைத்து அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது."

"அச்சோ.. அந்த குழந்தைக்கு மருந்து தரும்பொழுது அந்த வைரஸ் ஆக்டிவ் ஆகிவிட்டதா? " என்று அதிதி பதட்டத்துடன் கேட்டாள்.

'செம பிரில்லியண்ட்மா!' என்று மனதிற்குள் கங்காதரன் பெருமைப்பட்டுக் கொண்டார்.

'கரெக்ட் .. அந்த குழந்தையின் உடம்பில் பல பாதிப்புகள் ஏற்பட்டன. எலும்புகள் தேய்மானம் அடைந்தன. உடலில் உள்ள ரத்தம் குறைந்து போனது. தோலில் உள்ள நிறமிகள் நிறமிழந்தனசுருங்கச் சொல்லப்போனால் அந்தக் குழந்தை அருவமான ஒரு அமானுஷ்ய உருவம் பெற்றது. தற்சமயம்... சூரியனின் அகச்சிவப்பு கதிர்கள் தாக்கும் அபாயம் பகலில் இருப்பதால் இரவில் மட்டுமே அவள் வெளியே வர முடியும். பகல் முழுவதும் ஒரு இருண்ட இடத்தில் தன்னை அமைதியாக ஒளித்து வைத்து வாழ்ந்து வருகிறாள்."

"ரத்தன் நீங்க சொல்வது உண்மையா என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.