(Reading time: 22 - 44 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவனிடம் முழு கதையையும் சொல்ல ஆரம்பித்தான். க்ருபா  அவனுடைய அங்கிள் என்றும்... துளசி சுந்தரம் இவர்களுடைய காதல் திருமணத்திற்கு அவன் எப்படி உதவினார்..  அவனுடைய அன்னைக்கும்  துளசிக்கும் எவ்வளவு நெருக்கமான நட்பு இருந்தது.. என்பதை பற்றியும் தெளிவாக கூறினான். இந்த விஷயத்தில் யார் மீது தவறு என்பதை அவளுக்கு புரிய வைத்தான்.

ஆராய்ச்சி கூடத்தில் இருந்த அபிதாவை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்தது அவனுடைய அங்கிள்தான் என்பதையும்…  அந்த கிருபா தான் அவர்கள் காட்டு பங்களாவில் சந்தித்த ப்ரூனோ என்பதையும் சொன்னான்.

அனைத்தையும் கேட்ட அதிதி சிந்திக்க ஆரம்பித்தாள்.அவளுடைய வாழ்க்கையில் நடந்த பேரழிவு, அதிரதன் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. அவனுடைய கிருபா அங்கிள் தன் வாழ்க்கையை தொலைத்து விட்டார்.

யோசித்துப் பார்க்கும்போது அவர் மீது எந்த தவறும் இல்லை. அதீதமான ஆர்வக்கோளாறு மட்டுமே இருந்திருக்கிறது. கிருபா அங்கிளை பொறுத்தவரையில் வாழ்வதற்கு என்று வாழ்க்கை  இனி இல்லை. அவருக்கு  தேவையான ஒரே நல்ல விஷயம் அவர் மனம் அமைதியடைவது மட்டுமே. அதாவது அவர் தன்னுடைய குற்ற உணர்வில் இருந்து வெளிவர வேண்டும்.

 அதற்காகதான் கங்காதரன் அங்கிள் இவ்வளவும் செய்திருக்கிறார். அதிதியை மருமகளாக ஏற்றுக் கொண்டதுடன் அதிரதனை இந்த கிராமத்திற்கு அனுப்பி அம்மா மீது இருந்த களங்கத்தை துடைத்து…  இப்பொழுது அபி அக்காவை காப்பாற்றவும் முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். அவளுக்கு கங்காதரன் இடம் மிகுந்த நன்றி உணர்வு ஏற்பட்டது.

கங்காதரனிடம் திரும்பி,

" எனக்கு இப்பொழுது அனைத்தும் புரிகிறது. மாமா…  நீங்கள் எனக்கும் அபிக்காவிற்கும் உதவுவதற்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறீர்கள். அதற்காக மிக்க நன்றி. பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு பேரழிவு நடந்தது. அது என் குடும்பத்தை மட்டும்தான் பாதித்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் குடும்பமும் அதில் அதிகமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.