நாள் உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோனார். அவருக்கு ரத்த புற்றுநோய் வந்ததாக சொன்னார்கள். என்னுடைய மனதில் அந்த வியாதியைப் பற்றிய ஒரு அடித்தளம் விழுந்து விட்டது."
கண்கள் கலங்க மேலும் தொடர்ந்தான்…
" யாருமில்லாமல் ஆதரவற்று நின்ற என்னை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்தார்கள். அங்கு என்னைப்போல் ஒரு ஐம்பது குழந்தைகள் இருந்தனர். அனைவருமே பனிரெண்டு வயதிற்கு உட்பட்ட சிறு குழந்தைகள்தான். அங்கு தான் என்னுடைய வாழ்க்கையின் புதிய பரிமாணம் ஆரம்பமானது. எனக்கு தமிழ் சரிவர தெரியாததால் நான் அங்கு தனித்தே இருந்தேன். அந்த சமயத்தில் அங்கு வந்த சேர்ந்தவள்தான் தேஜு. அவளும் ஏழு வயது குழந்தைதான். அவளுடைய பெற்றோரை இழந்ததால் அவளை அங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். அவள் வட இந்தியாவிலேயே வளர்ந்த பெண். ஆதலால் அவளுக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்தது. இந்த மொழி பிரச்சினையால் நாங்கள் இருவரும் மட்டுமே பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். எங்களுடைய நட்பு அழகாக வளர்ந்தது. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். அது அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். இரண்டு வருடங்கள் கழிந்த பின் ஒரு மோசமான நாள் வந்தது…"
இதை சொல்லும் பொழுது அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக ஆரம்பித்தது. தலைகுனிந்து கொண்டான். மனதிற்குள் ஏதோ அதிர்வு கிளம்ப அதிரதன் வினயின் தோளில் ஆதரவாகக் கை வைத்தான்.
"தேஜு வடக்கத்தி பெண் என்பதால் சிகப்பாக அழகாக இருப்பாள். அதுவும் அவள் வளர வளர விடுதியில் இருந்த பொறுப்பாளர்களின் பார்வைகள் மாறிப்போனதை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. எனவே அவள் பெரும்பாலும் தனிமையில் இருப்பதில்லை. என்னுடன் இருப்பாள் அல்லது எங்களுடைய நட்பு வட்டத்திற்குள்ளேயே இருப்பாள். ஒரு நாள் இரவு நாங்கள் உறங்கும் போகும்போது விடுதி பொறுப்பாளர் தேஜுவை அழைத்தார். அவளுடைய உறவினர் வந்து இருப்பதாக சொன்னார். ஆனால் அதை நம்ப மறுத்தாள். அவருடன் போகவும் மறுத்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு ஏதோ பயம் தோன்றி விட்டது என்பது எங்களுக்கு புரிந்தது."
"அவளுடைய விருப்பம் இல்லாமல் அவளை அவர் இழுத்துக் கொண்டு