வேண்டும். முதலில் நீங்கள் இரவில் வெளியே சொல்லக்கூடாது. இரண்டாவது உங்களுக்கு ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையை செய்து அதனுடைய ரிப்போர்ட்டில் நான் பார்க்க வேண்டும். அதற்காக நாளை காலை ஆம்புலன்சை கொண்டு வருகிறேன். நீங்கள் இங்கிருந்து அந்த சோதனைகளை மேற் கொள்ளலாம்" என்றான். உடனே அதிதி கேட்டாள்,
" அக்கா வெளியில் செல்லக்கூடாது என்றால் அறையிலேயே இருக்க வேண்டும். அவர்களுக்கு பொழுது போக வேண்டாமா... அவர்கள் தொலைக்காட்சி பார்க்கலாமா?""
" இல்லை இல்லை வெளிச்சம் படாமல் இருப்பது நல்லது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றையெல்லாம் அறிமுகம் செய்யலாம். அதுவரை புத்தகம் படிக்கலாம்... ஏதாவது வரையலாம். ஆனால் வண்ணங்களை தொடவேண்டாம். பென்சில் அதுபோல ஏதாவது வைத்து வரையலாம். நான் பாலக்காடு சென்று வந்த பின்தான் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை ஆரம்பிப்பேன். அதுவரை அவர்கள் ஓய்வெடுக்கட்டும். அவர்களுடன் பேசிக் கொண்டிரு. தேவையான ஆரோக்கியமான உணவுகளை நான் எழுதித் தருகிறேன். அதை தந்து விடு. இப்பொழுது அவர்கள் என்ன மாத்திரை சாப்பிடுகிறார்களோ சாப்பிட்டுக் கொண்டே இருக்கட்டும். பிறகு நான் வந்துவிடுகிறேன். எனக்கு ஒரு நான்கு நாட்கள் இடைவெளி மட்டுமே தேவை. அதுவரை நீங்கள் இங்கேயே இருங்கள். உங்களுக்கு துணையாக என்னுடைய உதவியாளர் வினயும் இங்கு இருக்கட்டும். உங்களுக்கு சில புத்தகங்களையும் நான் தந்து விட்டு செல்கிறேன். உங்களுக்கு எந்த மாதிரியான புத்தகங்கள் பிடிக்குதோ அதை அவனிடம் சொன்னால் மேலும் கொண்டு வந்து தருவான்." மூச்சு விடாமல் தொடர்ந்து...
"அதிதி, ஒரே ஒரு விஷயம் அவர்கள் புத்தகம் படிக்கும் பொழுது நீயும் உடனிருந்து படித்துக் காட்டு. அவர்கள் வாய் விட்டு புத்தகத்தை படிக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய குரல் தசை மெல்ல மெல்ல அசைந்து அவரால் பேச ஆரம்பிக்க முடியும். அதற்காக சில மருந்துகளையும் நான் எழுதி தருகிறேன். அதையும் பயன்படுத்திக் கொள்.வாய்விட்டு புத்தகம் வாசிக்கும் முன் அந்த மாத்திரையை வாயில்