போட்டு வைக்க வேண்டும். அப்பொழுது தசைநார்கள் குரல்வளை தசைநார்கள் மென்மையாக மாற ஆரம்பிக்கும். செயல்பட ஆரம்பிக்கும். இரண்டொரு நாட்களில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது அவர்களால் பேச முடியும். நாம் அதை முயற்சி செய்து பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு சென்றான்.
அவனை அவன் எதிர்பார்த்தபடியே க்ருபாவிடம் ஒரு புத்தக அலமாரி இருந்தது. அதிலிருந்து குறிப்பிட்ட சில புத்தகங்களை எடுத்து அதிதியிடம் தந்தான். அபி ஆர்வமாக அதை படிக்க ஆரம்பிப்பது தெரிந்தது. அதில் சில சந்தேகங்களை அதிதி இடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
அந்த நாள் அப்படியே கழிந்தது மறுநாள் ஆம்புலன்ஸ் வரவும், அதிலிருந்த கருவிகளை பயன்படுத்தி அவன் அபியின் முழு உடல் பரிசோதனைகளை முடித்து அந்த குறிப்புகளை பதிவு செய்தான். அதனை எடுத்துக்கொண்டு அன்று மதியமே அவன் பல காட்டிற்கு விரைந்து விட்டான். அபிக்காக அதிரதன் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்று அதிதி மனமார வேண்டிக் கொண்டாள்.
அவள் தனிமையில் இருக்கும் அபியுடன் நேரத்தை கழித்தாள். பெரும்பாலும் அவள் கிருபாவிடமும் பேசவில்லை. அவளுக்கு தெரிந்த விதத்தில் அபியுடன் புத்தகங்கள் வாசித்து நேரத்தை கடத்தினாள. இரண்டொரு நாட்கள் கழிந்தது. அபிக்கு குரல் வரவில்லை. ஆனால் அவளால் அழகாக எழுத முடிந்தது.
அபிக்கு அவ்வளவாக படிப்பு வராது என்றுதான் அதிதி நினைத்தாள். ஆனால் அவளுக்கு கவிதை படிப்பதிலும், எழுதுவதிலும் தமிழ் புதினங்களை படிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது என்பது அப்போதுதான் புரிந்து கொண்டாள்.
அவளுக்கு பேப்பர் பேனா தந்து கவிதை எழுது ஊக்குவித்தாள். ஆரம்பத்தில் இரண்டு வரி கவிதைகள் எழுதியவள்… மூன்றாவது நாளிலேயே அழகான கவிதைகளை எழுத ஆரம்பித்தாள். நான்காம் நாளில் அவள் ஒரு கவிதையை முத்தாய்ப்பாக எழுதினாள். அதற்கு அதிதியால் சரிவர விளக்கம் சொல்ல முடியவில்லை.
அந்தக் கவிதைக்கு விளக்கத்தை அபியிடம் கேட்டாள. ஆனால் அபி அந்தக்