' சத்யா வெல்கம்" என்று உரத்த குரலில் சொன்னபடி பாலவர்மா முன்னே வந்து அவர்களை வரவேற்றார் அவர் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
30 ஆண்டுகள் அனுபவமுள்ள அவர் சத்யாவிடம் மிகுந்த பிரியம் உடையவர். உண்மையில் சத்யாவை தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவர் இதற்கு முன் நிறைய முறை அந்த சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார்.இந்த முறை சத்யாவை நிறுத்தக ஜெயிக்க வைத்து விட்டார்.
"நீங்க செஞ்ச அத்தனை உதவிக்கும் நன்றி சார்." ஒரு அடி முன் சென்று அவரிடம் கை குலுக்கினான்.
"வாங்க சத்யா… விழா நடக்கும் இடத்துக்கு போவோம்." என்று அவனை அழைத்துக்கொண்டு முன்னேறினார்.
அங்கிருந்துன முகங்களில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைவுற்று இருந்ததை பார்த்து அவனுக்கு மனம் லேசாகியது. அவன் மீது நம்பிக்கை வைத்து எத்தனை பேர் அவனை தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இனி இந்த இடத்திற்கு வரும் பொழுது தன்னுடைய சொந்த கவலைகள் துயரங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு மனதை ஒருமைப்படுத்தி வேலையை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
பதவி ஏற்பதற்காக மேடை ஏறியவனால் தனக்கு முன் அமர்ந்திருந்தவர்களின் முகத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது. அப்போது அவனுக்கு இன்னும் சில விஷயங்கள் பிடிபட்டன. அவனை பிடிக்காதவர்களும் அங்கு இருந்ததை அவர்களுடைய நடவடிக்கைகளால் புரிந்து கொண்டான். கண்டிப்பாக அப்படித்தான் இருக்கும்.
ஏனெனில் அவன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளான். அவனிடம் தோல்வியுற்றவரின் ஆதரவாளர்களும் அங்கு இருப்பார்கள். அவர்களுக்கும் அவன் நல்லது செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் அந்த தலைவர் தேர்தலில் நோக்கம்