(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

பொழுது கைத்தட்டல்களுடன் அவனை வரவேற்றார்கள். அதிலும் கூட சிலர் அவனை முறைத்துக் கொண்டே இருப்பதும் அவனுக்கு புரிந்தது. இதையெல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய அலுவல்களை தொடங்கினான்.

அவன் தன்னுடைய அறைக்குச் சென்று தன்னுடைய பொறுப்பு சார்ந்த அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தான். மனதில் துயரமும் அழுத்தமும் எவ்வளவு இருந்தாலும் அவனால் அந்த வேலைகளை ஒருமுகப்படுத்தி செய்ய முடிந்தது. அந்த வேலையில் மூழ்கிப் போனான். இரண்டு மணி நேரம் கழித்து அவன் அதனை முடித்து விட்டு நிமிர்ந்தாலனன். அப்பொழுதுதான் அவன்னுக்கு  இந்த உலகத்தை பற்றிய நினைவே வந்தது போலும்.

வெளியே வாகனங்கள் ஹாரன் அடித்து கொண்டு செல்லும் ஓசை கேட்டது. அந்த அறையின் ஜன்னல் சாலையை ஒட்டியே அமைந்திருந்தது. அது முதல் மாடியில் அமைந்திருந்தாலும் சாலை போக்குவரத்து அங்கிருந்து அவனால் பார்க்க முடியும். எழுந்து சென்று ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தான்.

அந்த நான்கு சாலை சந்திப்பில் இருந்த சிக்னலை பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டே…  தன்னையும் அறியாமல் தவிர்க்க முடியாமல் அந்த இடத்தை பார்த்து விட்டான்பிறகு தான் அவன் செய்த தவறு புரிந்து விட்டது. அவன் அதை இப்பொழுது பார்த்திருக்கக் கூடாது. பழைய நினைவுகள் அவனை ஒரு நொடியில் ஆக்கிரமித்து விட்டன. மீரா….!

உடல் பதற… கைகள் நடுங்கஅந்த சிக்னலை பார்த்தான். அது சரியாக அந்த பில்டிங் வாசல் அருகில் இருந்தது. அதனால் தான் அந்த முட்டாள்தனத்தை அவன் செய்தானோ

அப்படி மிரட்டல் விடுத்து மீராவை தடுக்க நினைத்தது கோழைத்தனம். அன்பிற்கு செவி சாய்க்காத வேண்டுகோள்மிரட்டி அடைய முடியுமா…?

ஒரு நொடியில் அவன் உலகமே மாறிப்போனது. அதன் பிறகுதான் மீராவின் மென்மையான இதயத்தை புரிந்து கொண்டான். ப்ச்

"இப்போது உச் கொட்டி என்ன பிரயோசனம். ஒரு சின்ன பொண்ணோட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.