"என்ன வாயடைச்சு போயிட்டியா ?. உனக்கெல்லாம் வாயை திறந்து பேச தகுதியே கிடையாது. மீரா மென்மையான பொண்ணு. என்னோட அத்தை மகள். அவளை சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும். நீ குறுக்க வராம இருந்தா அவளை நான் மணந்து இருப்பேன். பூப்போல பாவித்து ஒவ்வொரு நொடியும் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்திருப்பேன். இப்படி அல்பாயுசில் போய் சேர விட்டிருக்க மாட்டேன்" என்று பரத் குரலை உயர்த்தினான்.
முக்ம சிவக்க அவனுக்கு பதில் சொல்ல வார்த்தைகளை தேடியபோது…
"மிஸ்டர் பரத்.. இது உங்களுடைய வீடு அல்ல. இங்கு சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவது தவறு. அத்துடன் தலைவருக்கு உரிய மரியாதையை அவருக்கு தந்து நீங்கள் பேசவேண்டும். இப்பொழுது நீங்கள் வெளியே செல்லலாம்" என்று கடினமான குரலில் நிரஞ்சன் குறுக்கிட்டான்.
அவனை முறைத்துவிட்டு பரத் வெளியேறினான். அதற்கு மேலும் அங்கே இருந்தால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியும். ஏனெனில் அவன் அந்த சங்க அலுவலகத்தில் ஒரு சாதாரண க்ளர்க் வேலையில்தான் இருக்கிறான். அவனை கழுத்தை பிடித்து தள்ளவும் நிரஞ்சனால் முடியும். அதை சத்யாவே செய்யலாம்… ஆனால் மீராவின் உறவினர் என்பதால் தயக்கம் இருக்கும். இந்த ரஞ்சன் எதை வேண்டுமானாலும் செய்வான்… மனதில பயம் தோன்றவும் அங்கிருந்து வெளியேறி விட்டான்.
"இடியட்… நரி சிங்கத்துக்கு நாட்டாமை செய்ய கேட்குதாக்கும்" என்று கடிந்தான். அதை கேட்கவும் சத்யாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.
"இப்போது ஏன் சிரிக்கற…"
"இந்த பழமொழி எல்லாம் நீ எங்கே கற்று கொண்டாயோ… கோபத்தில்கூட என்னை சிங்கம்னு சொல்லிட்ட"
"அவன்லாம் ஒரு ஆள்னு பேச விட்டுட்டு இருக்க… ஒரே அறை கொடுத்து துரத்தி இருக்கணும்"
"ச்.. அப்படி செய்ய தோணலை ரஞ்சன். என்னை அப்படி ஒரு இழிவான