விடுவீர்கள்!.
வண்டியை நிறுத்தியவள்.. தலைமுடியை கட்டியிருந்த ஹேர் பேண்ட்ஐ எடுத்தாள். வண்டியில் லைசன்ஸ் இத்யாதிகளை இணைக்குமாறு குத்தியிருந்த குண்டூசியை எடுத்தாள்… அப்படியே அந்த பேண்ட்ஐ காட்டாபெல்ட் போல மாற்றி குண்டூசியை அம்பாக மாற்றி கல்பியின் வெற்று முதுகிற்கு குறி பார்த்து அடித்தாள்.
"ஐயோ…" துள்ளிய கல்பி திரும்பி பார்த்தாள். சிரித்துக் கொண்டு நின்றிருந்த ரேச்சலை பார்க்கவும்...
"ஏய்… எருமை நீயாடி…?"
"எருமை யாரு நீயா நானா… இப்படி முதுகு தெரியற மாதிரி ப்ளவுஸ் போடக்கூடாதுன்னு உனக்கு பஞ்சாயத்துலயே சொல்லியிருக்கு. திருந்தவே மாட்டியா?"
"ஆமா… இந்த ஊரு நாட்டாமை சொல்ல வந்துட்டாள். நீயே பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி.. போடி மறதி பைத்தியம்"
"அடிங்.." என்று குனிந்து கையில் கிடைத்த கல்லை எடுத்தாள்.
அதை பார்க்கவும் கல்பி வண்டியை வேகமாக ஓட்டி சென்று விட்டாள்.
"இதை பத்திரமாக வைடா… அவள் திரும்பி வர்றப்போ கண்டிப்பா அடிப்பேன்." ரேச்சல் பொருமினாள்.
அப்படியே அங்கருந்த மரக்கிளையில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளுடன் அமர்ந்திருந்த எடி… சற்று நேரம் கழித்து...
"டேச்சல்… அவள் ஊத்து பக்கமாகவும் திரும்பி போகலாமே.. நமக்கு பயந்து இந்த பக்கம் வர மாட்டாள்" என்று ஐயம் கொண்டான்.
"அட.. ஆமால்ல.. எனக்கு வேற கொஞ்சம் மறதியா…நல்ல வேளை நினைவுபடுத்திட்ட""
"மறதி இருக்குணு நீயா ஒப்புக்காதே.. அதைதான் அவள் கிண்டல் செய்தாளே.."
"சரிடா… நாம ஊத்து பக்கம் போகணும்" மரத்திலிருந்து குதித்து வண்டியை கிளப்பினாள்.
விரைவாக ஊற்றை நெருங்கி விட்டாள். எட்வர்ட் சொன்னது சரிதான்… கல்பி அந்த ரூட்டில்தான் வந்து கொண்டிருந்தாள். மீண்டும் அங்கிருந்த சாலையோர மரத்தின் மீது இருவரும் தஞ்சமடைந்தனர். கல்பி அருகில் வர காத்திருந்தனர்.
"டேச்சல்… அவளோட வாய்க்கு குறி வைக்கணும். என்னா பேச்சு பேசுனா!" எடி எடுத்து சொன்னான்.
ரைட்டு… அப்படியே செய்வோம்...
அவளுடைய வண்டி விரைவாக வந்தது.. அந்த மரத்தை நெருங்கியது.. ரேச்சல் கையில்