இருந்த கல்லை ஹேர் பேண்டில் வைத்து சரியாக குறி வைத்தாள். ஒலிம்பிக் அக்யூரஸி..
கரெக்டாக கல்பி க்ராஸ் செய்ய… கல்லை ரிலீஸ் செய்தாள்… பேச்சா பேசின.. அதுவும் யாருகிட்ட. .. ?
ஆனால் அவள் அமர்ந்து இருந்து மரக்கிளை ஆட.. மைக்ரோ செகண்ட் வித்தியாசத்தில் கல் தயங்கி பறந்தது…
"ஔச்... "
ஐயோன்னுல கேட்டிருக்கனும்… ஔச்னு கேட்குது.. அதுசரி கல்பிக்கு ஏன் இப்படி கட்டை குரலாக இருக்கு…?
திகைத்துபோய் மறைவிலிருந்து எட்டி பார்த்தாள்… அங்கே இரு சக்கர வாகனம் ஒன்று கீழே விழுந்திருந்தது.… ராயல் என்ஃபீல்டு!
அடிபட்டவன் நெற்றியில் கை வைத்து உதறிக் கொண்டு எழுந்தான். அவன் முகம் தெரியவில்லை..
அடடா.. அந்த கல் வேற யார் மீதோ பட்டிருச்சு..எடியிடம் கிசுகிசுத்தாள்.
"அக்கா அமைதியா இரு. மாட்டிக்குவோம்.." அவனும் ரகசியமாக பேசினான்.
அதற்குள் எம்.80ஐ திருப்பிக் கொண்டு வந்த கல்பி…
"அச்சோ.. அடி பட்ருச்சா?" என்று கொஞ்சினாள்.
"நத்திங்… நீங்க போங்க."
"வண்டியை பார்த்து ஓட்டியிருக்க கூடாதா சார்?" என்று கேட்டபடி தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
"நோ.. நோ… ஏதோ ஒண்ணு பறந்து வந்து நெற்றில பட்டுச்சு. பாலன்ஸ் போயிடுச்சு. தட்ஸ் ஆல். நீங்க போங்க…"
"அடி பட்டிருக்கா சார்? மருந்து வேணுமா?" கெஞ்சதலாக பேசினாள்.
அவளுக்கு நன்றி சொல்லி வண்டியை நிமிர்த்தியவன் இப்போது விஷுவலுக்குள் வந்தான்.
அட… அந்த பூக்காரன்...மனசு பதறியது… அடுத்த நிமிடம்…
நல்லா படட்டும்… ஒரு புத்திசாலி பொண்ணை ஸ்டுப்பிட்னு சொன்னானே...என்று அமைதியாகி விட்டாள்.
அதற்குள் கல்பி கிளம்பிவிட சத்யன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்…
அவன் அவ்விடம் விட்டு போயிருக்கணும்… ஆனால் சுற்றும் புறமும் எதையோ தேடினான். எதையோ இல்லை யாரையோ தேடுகிறான். கல்லை வீசியது யார் என்று தேடுகிறானோ..
வாயில் கை வைத்து அமைதியாக இருக்குபடி எடிக்கு சைகை செய்தாள். அச்சோ… அந்த