"பாட்டி !!!" இரவு உணவு முடிந்து தன்னுடைய அறையில் இருந்த விசாலம் தமிழ்செல்வியின் அழைப்பில் நிமிர்ந்தார்.
"வா செல்வி என்ன அங்கேயே நிக்கற?" எனவும் அவரின் அருகே வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் கைவிரல்களை பின்னி கொண்டு இருந்தவளை பார்த்த விசாலம் "செல்வி...என்ன விஷயம்??? ஏதோ சொல்லணும்னு வந்திருக்க. ஆனா சொல்ல தயங்கற. இந்த பாட்டிகிட்ட உனக்கு என்ன தயக்கம்? சொல்லு என்ன விஷயம்?" என அவளின் பின்னி கொண்டிருந்த விரல்களை விலக்கியபடி கேட்டார்.
"பாட்டி...எங்க வீட்ல நான் தான் ஒரே சோர்ஸ் ஆப் இன்கம். இப்போ அம்மாவும் காவ்யாவும் மட்டும் தனியா இருக்காங்க. இனி நெஸ்ட் இயர் அவளை காலேஜ் சேர்க்கணும். அதுக்கெல்லாம் நெறய பணம் வேணும்...."அவள் தயங்க,
"பைத்தியக்காரி எவ்ளோ வேணும்னு சொல்லு. இது எல்லாம் உங்க நாலு பேருக்கும் உள்ள சொத்து. இதுல உனக்கு என்ன தயக்கம்?" விசாலம் பாட்டி புரியாமல் கேட்க, "இல்லை...இல்லை பாட்டி" என அவசரமாக மறுத்தாள் தமிழ்செல்வி.
"பாட்டி நான் சொல்றதை தப்பா நெனைக்காதிங்க. எனக்கு....எனக்கு ஒரு வேலை வேணும். என்னால இங்க இருந்து பணம் வாங்கி செய்ய முடியாது" தமிழ்செல்வி சொல்ல, விசாலம் அதிசயித்து போனார்.
அவளை பற்றி அறிந்தவர் தான் ஆனால் அவளின் இந்த சுயமரியாதையும் பணத்தின் மேல் ஆசை படாத குணமும் கண்டு அவருக்கு மீண்டும் அதிசயம் தோன்றியது.
"நீ இதை பத்தி ராம் கிட்ட பேசுனாயா?" விசாலம் கேட்க, "இல்லை என தலையசைத்தவள் "எனக்கு அவருகிட்ட பேச கொஞ்சம் பயமா இருக்கு பாட்டி. அதே நீங்க சொன்னிங்கன்னா அவரு கண்டிப்பா ஓகே சொல்லிடுவாரு. ப்ளீஸ் பாட்டி" என விசாலத்தின் கையை பிடித்து கொண்டு தமிழ்செல்வி கெஞ்ச, "ஆனாலும்...." விசாலம் ஏதோ சொல்ல வந்து தயங்க, "எனக்கு புரியுது பாட்டி. நான் வேலைக்கு போனா இந்த குடும்பத்துக்கு தான் கெட்ட பேர் வரும். அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் வர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்" என்றாள் தமிழ்செல்வி.
"அப்போ நீ ஏதோ ஒரு ஐடியா வெச்சுருக்க அப்படி தானே?" பாட்டி கேட்கவும் "ஆமாம்" என தலையசைத்தாள் தமிழ்.
"ஹ்ம்ம் சரி என்ன யோசனைன்னு சொல்லு அதையும் கேட்போம்." என விசாலம் சொல்லவும் "அசோக் இருக்காருல. அவரு புதுசா ஒரு ஹாஸ்பிடல் ஓபன் பண்ண போறாங்க. சோ அதுல