(Reading time: 20 - 39 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"ராம், பரத் அடுத்து ஏதாவது பிளான் இருக்கா?" -விசாலம்

"பாட்டி...அது நானும் இலக்கியாவும் ஒரு ஒன் வீக் நம்ம பாண்டிச்சேரி ரிஸார்ட்ல ஸ்டெ பண்ணலாம்னு இருக்கோம்" - பரத்

"குட். நீ ராம்?" - விசாலம் கேட்க, "எனக்கெல்லாம் எந்த பிளானும் இல்லை பாட்டி" என்றான் சாப்பிட்டு கொண்டே.

"என்னது ஒரு பிளானும் இல்லையா? இலக்கியா பிரேக்னன்ட்டா இருக்கறதால அவங்க தூரமா எதுவும் பிளான் பண்ணல. நீ செல்வியை கூட்டிட்டு எங்காவது போலாம்ல?" விசாலம் கேட்கவும் அப்போது தான் தான் யோசிக்காமல் பேசியதை உணர்ந்தான் ராம்.

"அ...அது..."ராம் என்ன சொல்வது என தெரியாமல் தடுமாற, "இல்லை பாட்டி எனக்கு இந்த ட்ராவல் எல்லாம் கொஞ்சம் அலர்ஜி. அதான் நான் எங்கயும் பிளான் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றாள் தமிழ்செல்வி.

"ஓ...சரி. அது உங்க ரெண்டு பேருடைய விருப்பம். நான் ஒரு வாரம் நம்ம பண்ணை வீட்டுக்கு போலாம்னு இருக்கேன். உங்க ரெண்டு பேருடைய பொறுப்பு என் கைல இருந்ததால ரெண்டு நாள் மேல நான் இதுவரைக்கும் அங்க இருந்தது இல்லை. இப்போ உங்களை பார்த்துக்க உங்களுக்குனு ஒரு ஆள் இருக்கு. அதனால நான் ஒரு வாரம் அங்க போயி தங்கலாம்னு இருக்கேன்" என்றார் விசாலம். 

"என்ன பாட்டி திடிர்னு?" -தமிழ்செல்வி

"ரொம்ப நாளா யோசிச்சது தான் செல்வி. இப்போ தான் டைம் கிடைச்சிருக்கு. அப்பறம் ராம் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். சாப்டுட்டு என் ரூம்க்கு வா" என்றவர் அங்கிருந்து எழுந்து அவரது அறைக்கு சென்றார்.

தமிழ்செல்விக்கு தெரியும் அவர் தன்னுடைய விஷயத்தை பற்றி தான் பேசப்போகிறார் என. ஆனால் அவளை அழைக்காமல் ராமை மட்டுமாக அழைத்து பேசுவதால் உள்ளே என்ன நடக்கும் என்ற பரபரப்பு அவளை தொற்றி கொண்டது.

சாப்பிட்டு முடித்த ராம் டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி கொண்டிருந்த தமிழ்செல்வியின் அருகே வந்தவன் "தேங்க்ஸ்" எனவும், அவனையே ஆச்சர்யமாக பார்த்தாள் தமிழ் செல்வி.

"எதுக்கு?" அவள் புரியாமல் கேட்க, "பாட்டிகிட்ட சமாளிச்சதுக்கு" என்றான் ராம்.

லேசாக சிரித்தவள் "பாட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க மனசு வருத்தப்படற மாதிரி நான் என்னைக்கும் விடமாட்டேன்" என்றவள் அங்கிருந்து நகர, ராம் பாட்டியின் அறைக்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.