நுழைந்தான்.
ஹாலில் இருந்த சோபாவிலேயே அமர்ந்திருந்தாள் தமிழ்செல்வி. ராம் பாட்டியின் அறைக்குள் போய் கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகிறது. ஏன் இன்னும் வெளியே வரவில்லை என்ற யோசனையுடன் கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் அந்த அறையை திறந்து வேகமாக வெளியே வந்தவன் விறுவிறுவென வாசலை நோக்கி சென்றவன் ஹாலில் அமர்ந்திருந்த தமிழ்செல்வியை நின்று ஒரு அனல் காக்கும் பார்வையை வீசிவிட்டு அதே வேகத்தில் காரை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
அவனது பார்வையே சொன்னது உள்ளே பாட்டி சொன்ன விஷயத்திற்கு அவன் உடன்பட வில்லை என. அங்கிருந்து எழுதவள் பாட்டியின் அறைக்குள் ஓடினாள்.
பாட்டி கட்டிலில் அமர்ந்திருந்தார். உள்ளே ஓடி வந்த தமிழ்செல்வியை கண்டவர் "என்ன செல்வி இப்படி ஓடி வர? மெதுவா...என்னாச்சு?" என கூலாக கேட்கவும் தமிழ்செல்வி குழம்பி போனாள்.
"பாட்டி அவருகிட்ட சொன்னிங்களா? அவரு கோவமா போறாரே?" என கேட்க, "ஹ்ம்ம் சொன்னேன். முடியவே முடியாதுனு சொல்லிட்டேன்" என்றார் பாட்டி வருத்தமாக முகத்தை வைத்து கொண்டு.
"ஓ...சரி பாட்டி நான் வேற ஏதாவது யோசிக்கிறேன்" என அவள் முகம் வாடவும் "அதுக்கு பதிலா உனக்கு வேற ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ண சொல்லிருக்கான்" என்றார் விசாலம் முகத்தில் சின்ன குறும்பான புன்னகையுடன்.
"வேற வேலைக்கா?" மீண்டும் புரியாமல் தமிழ்செல்வி கேட்க, "ஹ்ம்ம் உன்னை நம்ம விஎஸ் க்ரூப் ஆப் கம்பெனிஸுடைய ஒன் ஆப் தி டைரக்டர் ஆக்க சொல்லிருக்கான்" எனவும் "என்னது?????" என வாயை பிளந்தாள் தமிழ்செல்வி.
கட்டிலில் இருந்து எழுந்த விசாலம் மெல்ல தன்னுடைய கையை கொண்டு அவளின் திறந்திருந்த வாயை மூடியவர் "ஆனாலும் உன் புருஷனுக்கு உன் மேல என்னனனன ஒரு பொசெசிவ்னெஸ்டியம்மா" என அவளை நெட்டி முறிக்க "என் மேல போஸ்சஸிவ்வா வாய்ப்பில்லையே" என குழம்பி போனாள் தமிழ்செல்வி.
இதை எல்லாம் வெளியே நின்று கேட்டு கொண்டிருந்த இலக்கியா கண்களில் வெறுப்பும் கோபமும் தெறித்தது. தமிழ்செல்வியை மட்டும் விசாலம் கொண்டாடுவதாக எண்ணிய அவள் அது அவளுக்கு ஏற்பட்ட அவமானமாக எண்ணினாள். அது தமிழ்செல்விக்கு எதிராக அவள் மனதில் புகைந்து கொண்டிருந்த நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றியது.
தொடரும்
Next episode will be published on 11th July. This series is updated weekly on Saturday mornings.