பேசிக்கிட்டிருக்கே. உன்னை என்னடி பண்ணலாம்?"
"அப்புறம் நான் எதை நினைச்சு கவலைப்படறேனோ அதைத்தானே சொல்ல முடியும்? அதுவும் இன்னிக்கு பீச்சில் மீன் வறுவல் வாங்கலாம்னு நான் சொல்லியும் நீ இழுத்துட்டு வந்துட்டே."
"எனக்கு தலை வலியா இருந்துச்சு அதான். நானே உனக்கு நாளைக்கு மீன் சமைத்து தர்றேன் சரியா?"
"சரி."
"அப்படின்னா இப்ப தூங்கு."
"ஓ.கே. குட் நைட்."
சுகன்யா மறுபக்கம் திரும்பிப் படுத்துவிட்டாள்.
அவள் உறங்கினாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் மறுமுறை இவளைத் தொந்தரவு செய்யவில்லை.
மகாலட்சுமிக்கு மீண்டும் அவன் தன்னை ஏன் வெறுக்கிறான்?தான் என்ன தவறு செய்தோம்? என்ற யோசனை.
தேவையில்லாமல் ஒருவரின் வெறுப்புக்கு ஏன் தான் ஆளாக வேண்டும் என்று யோசித்தாள்? ஆனால் யார் அவனிடம் பேசுவது?
எனக்குப் பணக்காரத் திமிர் என்று அவனிடம் எப்போது காட்டினேன். என்னைப் பற்றி புரியாமல் எதற்காக தவறாக எண்ணுகிறான்?
இன்று ஏன் அவன் தன்னைப் பற்றி தவறாக எண்ணுகிறான் என்ற கவலை வந்தது என்று அவளுக்கேப் புரியவில்லை.
அவனைக் காணும் போதெல்லாம் அவள் கை தானாக தலைக்குப் போய் தடவிக் கொள்ளும். அவளுக்கு இன்றும் கூட அந்த வலியை உணர முடிந்தது.
அன்றைய தினம் அவளுக்கு நினைவு வந்தது. அவள் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். ஆறாம் வகுப்போ இல்லை ஏழாம் வகுப்போ இருக்கலாம். அதெல்லாம் நினைவு இல்லை. ஆனால் அவன் தன் தலையில் குட்டியது மட்டும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது.
மகாலட்சுமி வெளியில் எதையும் உண்ணுவதை அவளது குடும்பத்தார் விரும்புவதில்லை.
அவள் எதை சாப்பிட ஆசைப்பட்டாலும் அவளுடைய தாய் வளர்மதியே செய்து கொடுத்துவிடுவாள்.
மகாலட்சுமிக்கு வெளியில் விற்கும் ஐஸ்கீரிம், ஐஸ் வாங்கி சாப்பிட பிடிக்கும். அதுவும் தள்ளுவண்டியில் வரும்போது பிள்ளைகள் ஆவலுடன் வாங்கி உண்பதைக் கண்டு அவளும் வாங்கித்தின்ன ஆசைப்படுவாள்.
அவள் காரில் பள்ளிக்குச் செல்வதினால் அவளால் தள்ளுவண்டியில் செல்லும் ஐசை வாங்கி