Page 11 of 11
“எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. அதனால் நீங்க எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்தனும்.” என்று ஒருவழியாக வந்த காரியத்தை சொல்லி முடித்தாள்.
“என்னடி நினைச்சுக்கிட்டிருக்கே உன் மனசில்?” அவனுடைய கடுமையான குரல் காதருகில் கேட்டதும் திடுக்கிட்டாள்.
எப்போது தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தான் என்று தெரியவில்லை. அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியில் இருபக்கமும் கைவைத்து அவளைக் குனிந்து பார்த்தவாறு நின்றிருந்தான். அவளால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலை. அவனை அன்னாந்து பார்த்து மிரள மிரள விழித்தாள் அவள்.
வளரும்............