(Reading time: 19 - 38 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

சந்தேகமும் இருந்தது. ஆனால் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லையே.

“அப்பா.” என்றாள் தயக்கமுடன்.

“என்னடாம்மா. சொல்லுடா.”

“அப்பா.. அ..அவ…..அவர்….”

மகள் தடுமாறுவதைக் கண்ட ராமச்சந்திரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

எப்போதுமே தெளிவாகப் பேசுபவள் அவள். தன் மனதில் உள்ளதை ஒளியாமல் பேசுவாள்.

“என்னடாம்மா? யார் அவர்?” அவருக்கு உண்மையிலேயே மகள் என்ன கூற வருகிறாள் என்று தெரியவில்லை.

“அதுதான் காலையில் வந்திருந்தாரேப்பா.” ஒருவழியாக கூறி முடித்தாள்.

“ஓ. நம்ம மாப்பிள்ளையை சொல்லறியாம்மா?”‘

“ஆமாப்பா.” வேறு வழியில்லாமல் ஆம் என்று ஒப்பினாள்.

“அவருக்கென்னடா?”

“இல்லை. அவர் எங்கே வேலை பார்க்கிறார்?” என்றாள் தயக்கத்துடன்.

“அவரை உனக்குத் தெரியும்னுல நாங்க நினைச்சுக்கிட்டோம். நீ என்னடா இப்படி பேசறே?”

“இல்லைப்பா. எனக்கு அவரைத் தெரியாது.”

அது உண்மையும்தானே? அவனைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்?

“இல்லப்பா. என்னோட ப்ரண்ட்ஸ் கேட்பாங்க.” என்றாள் தயக்கத்துடன்.

“இதற்கு என்னம்மா தயக்கம்? நான் முன்பே சொல்லாம்னுதான் நினைச்சேன். அப்புறம் சொல்ல நேரமில்லாமல் போயிடுச்சு.” என்றவர் அவனைப் பற்றி கூறினார்.

“மாப்பிள்ளையோட நம்பர் வேணுமாம்மா. அவர்கிட்ட எதுவும் பேசறியா?”

“ஐயோ. அதெல்லாம் வேண்டாம்பா.” என்று பதறினாள்.

“என்னம்மா வெட்கப்படறியா?”

சிரிப்புடன் கேட்ட தந்தைக்குப் பதில் கூற முடியாமல் தலை குனிந்தாள்.

அவள் எதற்காக அவனைப் பற்றிக் கேட்கிறாள் என்று தெரிந்தால் அவரிடம் இத்தனை மகிழ்ச்சி இருக்குமா? தன்னுடைய திருமணம் நடந்தால் அவர்கள் நிலைமை என்னவாகும்? அதற்காக அவனைத் திருமணம் செய்துகொண்டு நான் கஷ்டப்படுவதை பார்த்தால் அவர்கள் மனம் துடித்துப்போகுமே. அதனால்தானே திருமணத்தை நிறுத்த துடிக்கிறேன்.

தனக்குள்ளேயே மூழ்கிப்போனவளை வெட்கப்படுகிறாள் என்று எண்ணி ராமச்சந்திரன் தொந்தரவு செய்யவில்லை.

உணவு விடுதியில் தனதறைக்கு வந்தவள் வேலையில் ஈடுபட்டாள். ஆனால் மனம் முழுவதும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.