(Reading time: 25 - 50 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

வீட்டிற்குள் வரவேண்டியதுதானே?

எரிச்சலுடன் பேசாமல் இருந்தாள். ஆனால் அழைப்பு மணி விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தது.

வேறு வழியில்லாமல் எழுந்து சென்று கதவைத் திறந்தவளின் கண்கள் வியப்பால் விரிந்தன.

“அம்மா.”

என்றவளுக்கு அது நேரம் வரை அடக்கி வைத்திருந்த வருத்தம் எல்லாம் கண்ணீராய் வெளிவந்தது.

மகளைக் கண்ணீருடன் பார்த்த வளர்மதிக்கும் கண்கள் கலங்கியது.

தாயை அணைத்துக்கொண்டு அழவேண்டும் போல் தோன்றியது. அன்னையின் அரவணைப்பை மனம் நாடியது.

“வந்தவங்களை வீட்டுக்குள் விடாமல் இப்படி வழியை மறைச்சு நின்னுக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? என்னடா மகா? ஏன் உன் கண் கலங்குது?” தாயின் தோளில் சாய சென்றவளை இடையில் கேள்வி கேட்டவாறு தன் பக்கம் இழுத்துக்கொண்டவனை நம்ப முடியாமல் பார்த்தாள் மகாலட்சுமி. இவன் இத்தனை நேரம் எங்கிருந்தான்?

எப்படி அவளது அன்னை வரும் செய்தியறிந்து வந்தான்? ஒருவேளை வெளியில் தான் நின்றிருந்தானோ? அப்படித்தான் இருக்க வேண்டும்? அவள் அப்படியே அறைக்குள் வந்துவிட்டாள்.

வீட்டைப் பூட்டவில்லை. இருபக்கமும் திறக்கும் பூட்டு.

“வாங்கத்தை. வாம்மா சுகன்யா.” என்று வீட்டாளாய் வந்தவர்களை உபசரித்தான்.

அவள் தோளில் இருந்து தன் கைகளை அகற்றவும் இல்லை. தன் தோழி சுகன்யாவும் வந்திருக்கிறாள் என்றதும் அவள் வருத்தம் எல்லாம் பறந்தது. இப்போது அவன் அருகாமையில் இருப்பது கூச்சமாக இருந்தது. இவன் ஏன் வெட்கமில்லாமல் அம்மாவின் முன் இப்படி நடந்துகொள்கிறான். கூச்சத்தில் நெளிந்தாள்.

“போ மகா. போய் முகம் கழுவிக்கிட்டு வா. நான் அதற்குள் அத்தைக்கும், சுகன்யாவுக்கும் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்.” என்றான்.

அவள் நம்ப முடியாமல் அவனை விழித்துப் பார்த்தாள். அவர்களுக்கு நேராக எதையும் காட்டிக்கொள்ள முடியாமல் அவன் சொன்னதை செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளானாள். வளர்மதியும் மகளையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள். சுகன்யாவோ அவளைப் பார்த்து குறும்புடன் கண்களை சிமிட்டினாள்.

அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாளோ? ஆனால் அவர்கள் கண்களால் பார்த்தது எதுவும் உண்மை கிடையாது. அவன் நடிக்கிறான் என்று அவள் சொன்னால் யார் நம்புவார்கள்?

அப்படி சொல்வதால் என்ன பயன்? அவள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றுதான் வீட்டினர் அவளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

என்னதான் ஜாதகம் பொருந்தியிருந்தாலும் அவனைப் பற்றி விசாரிக்காமல் தன்னை அவனுக்குத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.