"எனக்கு அந்த விபத்து பற்றிய ரிப்போர்ட் வேணும். ரொம்ப அவசரம்…"
"இத்தனை நாள் எங்கே இருந்தீங்க?"
"நான் ஃபாரின்ல… "
"எந்த ஊரு?"
"நியூ… யுஎஸ்ல இருந்து லாஸ்ட் வீக்தான் வந்தேன். ஆன்ட்டிக்கு இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணி தரணும். லீகலா சொத்து பத்திரமெல்லாம் பேர் மாத்தனும்…" அவனும் சளைக்காமல் பேசினான்.
"அது சரி… இன்ஸ்பெக்டர்ட்ட ஃபார்மாலிட்டீஸ்னு எதுக்கு சொன்னீங்க?"
"ஏதாவது ஃபார்ம் எழுதி தரணும்… யாரையாவது ரெஃபர் பண்ணனும்… அப்படி இருந்தால் செய்யறேன்னு சொன்னேன். அதுக்கு இப்படி கத்தறாரு"
"இந்த இடத்துல ஃபார்மாலிட்டீஸ்னால் வேற அர்த்தம் உண்டு… "
"ஓ…"
"நீங்க நாளைக்கு வந்தால் ஃபார்மாலிட்டீஸை முடிச்சிட்டு நான் உங்களுக்கு தேவையானதை எடுத்து தர்றேன்."
"இன்னிக்கு முடியாதா…?"
"ஏஎஸ்பி ஒருத்தர் விஸிட் வர்றாரு. அதனால் முடியாது. நாளைக்கு வாங்க தம்பி" என்று அனுப்பி வைத்தார். வாசலுக்கு வந்து காரில் ஏறும்போது கவனித்தான்.
ஒரு ஜீப் வந்து நின்றது… அதிலிருந்து போலிஸ் உடையணிந்தவர் இறங்கினார். அவர்தான் ஏஎஸ்பியோ… அவர் பின்னாலேயே ரஞ்சன் இறங்கினான்.
அட அவருக்கு அதிகார மட்டத்துல பழக்கம் இருக்குபோல.. எதுக்கும் ரஞ்சனிடம் உதவி கேட்கலாமே என்று நினைத்தான்.
"ஹலோ ப்ரோ" என்று அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
ஆனால் ரஞ்சனை தொடர்ந்து அவன்… அந்த சத்யன்… (ஆஹா… இவன் பேரும் சத்யன்தானா…) இறங்குவதை பார்க்கவும் ப்ரேக்கடித்து நின்றான்.
அடடா… இவன் ஒருத்தன் எப்போ பார்த்தாலும் க்ளாடியேட்டர் ஹீரோ மாதிரி நெஞ்சை தூக்கி கிட்டு ரஞ்சன் கூடவே வந்து நிக்கறான்… நின்னாலும் பரவாயில்லை முறைக்க வேறு செய்கிறான்…!
வேறு வழியில்லாமல் உதவி கேட்கும் திட்டத்தை கை விட்டு ரஞ்சனை பார்த்து சிரித்து வைத்து கிளம்பினான்.
சத்யனை பொறுத்தவரை அவனுடைய தேடல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பது