"சரிப்பா… நீ அடிக்கடி கனவு லோகத்திற்கு போய் விடுகிறாய். நான் தூங்க போகிறேன். குட் நைட்டுபா" என்று கேலி செய்துவிட்டு ரேச்சல் நகர்ந்தாள். ஜெமி அவள் செல்வதை பாரத்து விட்டு…
"மீரா…" என்றான்.
"கூப்பிட்டியா என்ன?" என்று திரும்பினாள்.
"நான் உன்னை ரேச்சல்னு கூப்பிட்டேனாக்கும்…"
"இப்பதான… ரேச்சல்னு… அப்படி கூப்பிடலியா.. உன்னோட குரல் கேட்டுச்சே…" அவள் குழப்பமாக பார்த்தாள்.
"குட் நைட்" என்று சொல்லி அவன் அறைக்கு சென்று விட்டான்.
"லூசு ஜெமியா.. இல்லை.. நான்தான் லூசா…? இல்லாததை கற்பனை செய்துக்கறேனா.." என்று ரேச்சல் நினைத்தாள்.
அதைப்பற்றி அவள் யோசிப்பதை நிறுத்திக் கொண்டாள்.அவளுக்கு வேறு வேலை இருந்தது.
ஜெமியிடம் காலையில் பேசியபோது தோன்றிய விஷயம்தான். அவளுக்கு அம்னீசியா குணமாகி விட்டால் அவள் வாழ்ந்த இந்த நாட்கள் நினைவில் இருக்காது… ஆனால் சில சமயம் அதனை சிறு சிறு குறிப்புகள் மூலம் நினைவிற்கு கொண்டு வர முடியும் என்பது ஒரு தியரி…
(படத்தின் கிளைமாக்ஸில்… தலையில் குடத்தை வைத்துக் கொண்டு கதாநாயகன் ஆட்றா ராமா… ஆட்றா ராமா.. என்று சொல்லி தாவி குதிக்கும் காட்சி நினைவிற்கு வந்திருக்குமே… கிட்டதட்ட அப்படித்தான்… பேக் டு த டார்க் டே'ஸ்..)
ரேச்சலால் அம்மாவை இழக்க முடியாது. அம்மாவின் மடியில் படுத்து கொண்டு உற்ங்கும் நிம்மதி இந்த வாழக்கையின் கடைசிவரை இரந்தால் போதும்.
ஷீலாம்மாவை பற்றி… எடியைபற்றி.. மனுகுட்டி பற்றி ஒரு கடிதமாக எழுதி நம்பிக்கையானவரிடம் தந்து அவளுக்கு நினைவூட்ட சொல்லலாம்.
ஆனால் அவளுக்கான அந்த குறிப்புகளை யார் பொறுப்பாக தருவார்கள்…?
ஷீலாம்மா…? கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்… நான்தான்… நான்தான்… என்று சொல்லி கொள்ளும் பழக்கம் அவரிடம் கிடையாது. ரேச்சல் பழையபடி முகம் திருப்பினால் அமைதியாக ஏற்றுக் கொள்வார்.
ஜெமி… அவன் ஒருத்தன்… அத்தை சொல்வதைதான் கேட்பான். அவனும் கீ டீடெய்ல்ஸ் தர மாட்டான்…